என்னைப் பற்றிய பாடல் – 7

 (Song of Myself)

 

(1819-1892)
(புல்லின் இலைகள் -1)

மூலம் : வால்ட்   விட்மன்

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++++

மனிதன் என்பவன் யார் ?

நான் யார் ? நீ யார் ?

என்னைப் பற்றிக்
குறிப்பாய்ச் சொல்வேன்

தனித்து நீ

உன்னைப் பற்றி உரைத்திடு !

இன்றேல் வீணாய்ப் போகும் நேரம்

என்னை மட்டும் அறிந்து !

எதற்கு நான் வழிபட வேண்டும் ?

எதற்கு மதிப்பளித்து நான்

மதச் சடங்கைப் பின்பற்ற வேண்டும் ?

மக்கள் எல்லா ரிடமும் நான்

பார்ப்ப தென்னைத் தான் !

நல்லவரோ, தீயவரோ

நான் சொல்வது என்னைப் பற்றித்தான்

அவரைப் பற்றித்தான் !

தெரியுது எனக்கு

தெளிவாய் இருப்பதும் நான்

வலுவுடன் இருப்பதும் !

வாய்ப்புகள் குவிகின்றன எனக்கு !

இந்தப் பிரபஞ்சம் தொடர்ந் தோடி

இயங்கி வருகிறது !

எல்லாம் எழுதப் பட்டுள்ளன

என்னவென் றெனக்கு !

கற்றுக் கொள்ள வேண்டியது

என் கடமை !

எனக்கென்றும் மரண மில்லை

என்பதை நான் அறிவேன்

என் சுற்றியக்க வீதியை

ஒரு தச்சனின் கோணம் அளக்கும்

கருவி வரையாது !

என் ஆன்மா வுக்குத் தொல்லை

ஈந்திட மாட்டேன்

தன்னை  மெய்பித்துக் கொள்ள,

இன்றேல்

புரிந்து கொள்ள !

அடிப்படை விதிகள் ஒருபோதும்

மன்னிப்புக் கேட்ப தில்லை !

நான் நானாக வாழ்கிறேன்

போதும் அது எனக்கு !

+++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman   [November 19, 2012]

6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 5, 2013)

http://jayabarathan.wordpress.com/

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வால்ட் விட்மன் வசனக் கவிதை -14

  1. //எனக்கென்றும் மரண மில்லை
    என்பதை நான் அறிவேன்// என்ற வரிகள் கண்ணதாசன் கூறிய ”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்ற வரிகளோடு நன்றாய்ப் பொருந்துகின்றன. இதைத்தான் “great minds think alike” என்கிறார்களோ?
    //நான் நானாக வாழ்கிறேன்
    போதும் அது எனக்கு ! // என்ற வரிகளில் இருக்கும் நேர்மையும், துணிவும் பாராட்டப்பட வேண்டிய, அனைவராலும் பின்பற்றப்படவேண்டிய ஒன்றாகும். போலி முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு நாம் நாமாக வாழ்வோமே!
    அருமையான மொழிபெயர்ப்பை நல்கிய திரு. ஜெயபாரதன் ஐயாவிற்குப் பாராட்டுக்கள் பல.

    -மேகலா

  2. வேடிக்கை மனிதரைப் போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ ? பாரதியின் கூரம்பு வரிகளும் அதைத்தான் கூறுகின்றன. பாராட்டுக்கு மிக்க நன்றி மேகலா.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *