அத்தனையும் இருந்தும்…
செண்பக ஜெகதீசன்
உடலில் வலு இருக்கிறது
புலிக்கு-
அடுத்தவரை அடித்துத்தின்ன..
தப்பியோடத்
தைரியம் இருக்கிறது
மானுக்கு..
குடிலவேலை செய்யும்
குணம் இருக்கிறது
குள்ள நரிக்கு..
உடலை மறைத்து
உள்ளே வைத்துக்கொள்ள
ஓடு இருக்கிறது
ஆமைக்கு..
அத்தனையும் ஒன்றாய்ச் செய்ய
ஆற்றல் இருக்கிறது
மனிதனுக்கு..
ஆனாலும் அடிக்கடி
மட்டமாகிவிடுகிறானே
மிருகங்களை விடவும்…!
http://www.fanpop.com/clubs/wild-animals/images/2785495/title/big-cat-fight-wallpaper