பாகம்பிரியாள்
அன்பே,
நீ , அவசரமாய் நான் அலுவலகத்திற்கு செல்லும்
நாட்கள் பல எனக்கு சாரதியாய் இருந்திருக்கிறாய்.
பணப்பிரச்னை என்னை பிய்க்கும் போதெல்லாம்
கை கொடுத்து உதவியிருக்கிறாய்.
கவலை என்னும் மேகம் சூழந்த போதெல்லாம்,
இன்முகம் காட்டி என்னை கரையேற்றிருக்கிறாய்.
வேலையில்,  இற்ங்குமுகம் வந்த போதெல்லாம்
என்னை உன் நெஞ்சில் சுமந்திருக்கிறாய்.
இவ்வளவு எல்லாம் செய்த உனக்கு
என்ன கைம்மாறு செய்ய முடியும்?

பெண்கள் தினமான  இன்றைக்காவது
நீ அலுவலத்திலிருந்து வரும் போது,
சில ஆச்சரியங்களை பரப்பி வைத்து
கண்ணான உன்னை சீராட்டவும்,
பாராட்டவும் நான் நெடுநேரமாய் என்
காதை,  கதவுக்கருகில் வைத்து
காத்திருக்கிறேன் பொறுமையாய் .
எப்போது உன் மெல்லிய .
காலடி ஓசை கேட்குமென்று!
அன்புடன்,
உன் ………..

படம் தந்த இணைய தளத்திற்கு நன்றி 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *