நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்

3

-செல்வன்

பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கபடுபவை. ஏன் எனில் காட்டுமிராண்டி சமூகங்களில் இந்த வியாதிகள் இல்லை. தினம் பல் துலக்காத காட்டுமிராண்டி சமூகங்களில் ரூட்கனால் சர்ஜரி தேவைப்படுவது இல்லை. தினமும் மூன்று வேளை பல் துலக்கி, ஃப்ளாஸ் செய்து சுத்தமாக பல்லை வைத்து இருக்கும் நகர்ப்புற சமூகங்களில் தான் டென்டிஸ்டுகள் தேவைப்படுகின்றனர்.

1913ல் ஆப்பிரிக்காவில் மருத்துவ சேவைப்பணி ஆற்ற சென்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் அங்கே மேற்கு ஆபிரிக்காவில் வசித்த பழங்குடி மக்களை சந்தித்தார். 41 வருடங்கள் அங்கே மருத்துவராக பணி ஆற்றினார். 41 ஆண்டுகளில் பல லட்சம் ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கு மலேரியா, வயிற்றுகடுப்பு மாதிரி வியாதிகளுக்கு சிகிச்சை அளித்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார். ஆனால் 41ஆண்டுகளில் அவர் சந்தித்த அப்பென்டிக்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒன்று. கான்சர் வந்த பழங்குடி மக்களையும் அவர் சந்திக்கவில்லை. தொப்பை, தொந்தி, சர்க்கரை, கொலஸ்டிரால் இவை எதுவும் அந்த மக்களுக்கு இருக்கவில்லை.

ஆனால் 41 ஆண்டுகளில் மேலைய நாகரிகமும், மேற்கத்திய உணவுமுறையும் ஆப்பிரிக்கர்களிடையே பரவின. ரொட்டிகள், மாவுகள், பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவை நாகரிகமாயின. ஸ்வைட்சரின் இறுதி ஆண்டுகளிலில் ஆப்பிரிக்கர்களிடையே கான்சரும், சர்க்கரை, கொலஸ்டிரால் வியாதிகளும் பரவலாயின.

இதுபோல தென்னாப்பிரிக்காவில் 19ம் நூற்ராண்டில் இன ஒதுக்கல் கடுமையாக நிலவியது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. அங்கே டயபடிக் க்ளினிக் நடத்தி வந்த ஜார்ஜ் கேம்பெல் எனும் மருத்துவர் இரு விதமான நோயாளிகளை மட்டும் கண்டார். வெள்ளையர்களுக்கு டயபடீஸ், அப்பென்டிக்ஸ், ரத்த அழுத்தம் முதலிய நாகரிக வியாதிகள் அனைத்தும் இருந்தன. ஸூலுக்களுக்கு அம்மாதிரி வியாதிகள் இல்லை. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவரிடம் வந்த சர்க்கரை நோயாளிகளில் 80% பேர் இந்தியர்கள் (தமிழர்கள்). இதே மருத்துவர் பின்னாளில் பிலடெல்பியா சென்றபோது அங்கே இருந்த கருப்பினத்தவருக்கு வெள்ளையருக்கு சமமாக நாகரிக மனிதனின் வியாதிகள் இருந்ததை கண்டார். ஸூலுக்களுக்கும் அவர்களுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருந்ததை அறிந்தார்.

ஆனால் இன்று உடல் இளைக்கவும், டயபடீஸ், கொலஸ்டிரால் கட்டுபாட்டுக்கும் மக்களுக்கு கொடுக்கபடும் அறிவுரைகள் எது? நாகரிக மனிதனின் உணவுகளை உண்பதுதான். உதா; ரொட்டி, சப்பாத்தி, இட்டிலி முதலியவை. இவற்றில் கொலஸ்டிரால் அல்லது கொழுப்பு சுத்தமாக இல்லை. கொலஸ்டிராலோ, கொழுப்போ இல்லாத உணவை உண்ண சொல்லி மக்களுக்கு பரிந்துரைக்கபடுகிறது. மக்களும் 2% கொழுப்புள்ள பால், ஸ்கிம் மில்க், சோயா பால் முதலியவற்றை உண்கின்றனர். சிகப்பு மாமிசத்தை தவிர்த்து பழங்கள், வெள்ளை மாமிசம் எனப்படும் சிக்கன், சாலட் என உண்கின்றனர். இதனால் வியாதிகள் குறைகிறதா? உணவில் உள்ள கொழுப்புக்கும் உடலில் உள்ள கொலஸ்டிராலுக்கும் எதாவது தொடர்பு உண்டா?

கொலஸ்டிராலுக்கு காரணம் கொழுப்பு நிரம்பிய உனவுகளை உண்பது என நாம் எப்படி அறிந்தோம் என்பதே சுவார்சியமான விஷயம். இதை கண்டுபிடித்தவர் ஆன்சல் கீஸ் எனும் ஆய்வாளர். அவர் சுமார் 22 நாடுகளில் மக்களின் உணவையும் அவர்கள் கொல்ஸ்டிரால் அளவையும் ஆராய்ந்தார். அதன்பின் அதில் ஏழு நாடுகளின் டேட்டாவை மட்டும் எடுத்து பதிப்பிட்டார். அதில் மக்களின் உணவில் கொழுப்பு அதிகம் இருக்க அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவும் அதிகமாக இருப்பது கன்டுபிடிக்க பட்டது.

60களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆய்வுக்காக ஆன்சல் கீஸ் டைம் பத்திரிக்கையின் அட்டைபடத்தில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கபட்டார். அதன்பின்னர் கோடிகணகான டாலர்கள் கொலஸ்டிராலுக்கும் நம் உணவில் உள்ல கொழுப்புக்கும் இருக்கும் ஒற்றுமையை ஆராய செலவிடபட்டன. பின்னளில் வெளியான ஆய்வுகள் தெளிவான எந்த முடிவையும் தரவில்லை. ஆனால் அதற்குள் ஆன்சல் கீஸின் ஆய்வு முடிவை ஒட்டி பலரும் கொழுப்பு குறைந்த உணவுகலை உண்ண துவங்கினர்.

இந்த பிரச்சனையை தீர்க்க அமெரிக்க அரசு செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. ஜார்ஜ் மெக்கவர்ன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். கமிட்டி கொலச்டிராலுக்கு காரணம் கொழுபப என ஆராய்ந்தது. கமிட்டி முன் அறிக்கை சமர்ப்பித்த விஞ்ஞானிகளிடம் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவின. ஆனால் ஜார்ஜ் மெக்கவர்ன் இதற்கு முன் நேதன் ப்ரிக்ட்கிர்ன் எனும் மருத்துவர் நடத்திய கொழுப்பு குறைவான உணவுகளை உண்ணும் புரக்ராமில் கலந்து கொண்டவர். இந்த புரக்ராமில் கலந்துகொன்டவர்கள் எடை குறைந்தது உண்மை. ஆனால் கொழுப்பு குறைந்த உணவுகலை உன்ட பலரும் பின்னாளில் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துகொண்டதால் நேதன் அந்த புரக்ராமையே பின்னாளில் கைவிட்டு விட்டார்.

இப்படி இந்த புரக்ராமில் கலந்துகொண்டதால் மெக்கவர்ன் கொழுப்பு குறைவான உணவுகள் தான் நல்லவை என நம்பிவந்தார். கமிட்டி அறிக்கை வெளியாகி “உடலில் கொலச்டிராலை குறைக்க கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பதே வழி” என பரிந்துரைக்கபட்டது. உடனே அதை ஒட்டி அமெரிக்க அரசின் புட் பிரமிட் வெளியிடபட்டது. அதில் ரொட்டி, சீரியல் முதலிய தானிய உணவுகளை அதிகம் உண்ன மக்களுக்கு பரிந்துரைக்கபட்டது. மாமிசம், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக உண்ன அல்லது தவிர்க்க பரிந்துரைக்கபட்டது.

இந்த பரிந்துரைகளை ஒட்டி மில்லியன்கனகான டாலர்கள் சீரியல், ரொட்டி கம்பனிகளால் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. “இதயத்துக்கு நன்மை அளிக்கும் சீரியல்கள்” என்ற முத்திரையுடன் அவை வலம் வந்தன.

ஆனால் இது அனைத்துக்கும் அடிப்படையான மருத்துவர் ஆன்சல் கிஈஸின் ஆய்வு பல நாட்கள் மறுபரிசீலனைக்கு உடபடவே இல்லை. அவற்றை பின்னாளில் ஆராய்ந்தவர்கள் ஆன்சல் கீஸ் ஏழு நாடுகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துகொன்டதை விடுத்து அந்த 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் பதிப்பிட்டிருந்தால் நாம் உண்ணும் உணவில் உள்ல கொழுப்புக்கும், நம் உடலில் உள்ல கொலஸ்டிரால் அளவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை கண்டறிந்தார்கள்.

கீழே இருக்கும் கிராபில் இடப்பக்கம் இருப்பது 7 நாடுகளின் டேட்டா. வலப்பக்கம் இருப்பது 22 நாடுகளின் டேட்டா.

ஆன்சல் கீஸின் ஆய்வில் கொழுப்பு என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டதை விடுத்து புராசஸ் செய்யப்பட்ட செயற்கை கொழுப்புக்கும் (உதாரணமாக ஹைட்ரஜனேட்டெட் ஆயில்கள்- மாரடைப்பு அதிகமாக இருந்த நாடுகளில் இவை அதிகம் பயன்பட்டன), மாரடைப்புக்கும் உள்ள உறவை கணக்கிட்டிருந்தால் அவர் டேட்டாவில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்திருக்கும் என பின்னாளில் ஆய்வாளர்கள் கூறினார்கள். (உதா: கரோலின் பாரிங்கர்)

துரதிர்ச்டவசமாக கொழுப்பு மோசம் என ஒட்டுமொத்தமாக கொழுப்புக்களை குறைக்க சொன்னதால் மக்கள் இயற்கை கொழுப்புக்களான நெய், வெண்ணெய், பன்றிக்கொழுப்பு ஆகியவற்ரில் சமைப்பதை நிறுத்தி செயற்கை கொழுப்புக்களான மார்கரின், ஹைட்ரஜனேட்டட் வெஜிட்டபிள் ஆயில் (சோயா, சன்பிளவர், கார்ன் ஆயில்) ஆகியவற்ருக்கு மாறினார்கள். இவற்றில் இருந்த டிரான்ஸ்ஃபேட் மிக ஆபத்தானது, மாரடைப்பை ஏற்படுத்துவது என்பது பின்னாளில் தெரியவருவதற்குள் இவை “இதயத்துக்கு நலமளிப்பவை” என்ற முத்திரையுடன் பெரும் சந்தையை பிடித்து விட்டிருந்தன.

Inline image 1

ஆலன் கீஸ் ஆய்வை தொடர்ந்து உணவில் உள்ள கொழுப்புக்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலுக்கும் இடையே உள்ள உறவு ஆராயபட்டது. ஆய்வு முடிவுகள் தெளிவான எந்த ரிசல்ட்டையும் தரவில்லை.

உதாரணமாக அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சார்பில் நடந்த இந்த ஆய்வை எடுத்துகொள்வோம். ஆய்வின் முழு பிடிஎப் சுட்டியும் இங்கே காணலாம்

229 பேரிடையே நடத்தபட்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். கண்ட்ரோல் க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினருக்கு உணவு கட்டுபாடு எதுவும் விதிக்கப்டவில்லை. கரோனரி க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினர் குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உண்டார்கள். இறுதியாக கணக்கிட்டதில் கன்ட்ரோல் க்ரூப் கரோனரி க்ரூப்பை விட 12% அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் நிரம்பிய உணவுகளை உண்டதாக கணக்கிடபட்டது.

அதன்பின் இந்த இரு பிரிவினரின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளக்கபட்டது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் குறைந்த கொழுப்புக்களை உண்ட கரோனரி க்ரூப்பின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளவு கண்ட்ரோல் க்ரூப்பின் கொல்ஸ்டிரால் அளவை விட 16% அதிகம் இருப்பதாக் தெரிய வந்தது.

ஆக 12% அளவு குறைந்த கொழுப்பை உண்ட பிரிவினர் 16% அளவுக்கு ரத்தத்தில் கொல்ஸ்டிராலை அதிகரித்து கொன்டனர்.

இதய அடைப்பு உள்ளவர்களுக்கு குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை பரிந்துரைப்பதன் நன்மைகளை நிருபிக்க நடந்த இந்த ஆய்வு தலைகீழான ரிசல்டுகளை அளித்ததால் வெறுத்துபோன விஞ்ஞானிகள் “இதய அடைப்பு உள்ளவர்கள் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவுகளை உண்ணவேண்டும் என பரிந்துரைப்பதில் எந்த நன்மையும் இல்லை” என கூறி எழுப்பி ஆய்வை முடித்தார்கள்

அடுத்த வாரம் இதே தலைப்பில் நடந்த வேறு சில ஆராய்ச்சி முடிவுகளை காண்போம்

References:

1) Good calories, bad calories- Gary Taubes

2) http://en.wikipedia.org/wiki/Ancel_Keys#Seven_Countries_Study

3) D M. GERTLER, STANLEY MARION GARN and PAUL DUDLEY WHITE
Diet, Serum Cholesterol and Coronary Artery Disease
Print ISSN: 0009-7322. Online ISSN: 1524-4539

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்

  1. இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் குறித்து தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள் மக்களின் சந்தேகங்களை நீக்கி அவர்தம் நோய்களுக்குத் தீர்வு சொல்வதற்கு மாறாக எந்த உணவை உண்பது.. எதை விடுப்பது என்ற பெருங்குழப்பத்தையே மக்களிடம் உருவாக்கி வருகின்றன. எந்தத் தெளிவான முடிவுகளையும் வெளியிட இயலாத இந்த மருத்துவ ஆராய்ச்சிகட்கு மில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழிப்பதனால் விளையும் நன்மைதான் என்ன?

    காட்டு மனிதர்களின் உணவு முறையே எப்படிப் பார்த்தாலும் சிறந்ததாகத் தெரிகின்றது. கட்டுரையில் பயனுள்ள பல மருத்துவத் தகவல்களை வழங்கியுள்ள திரு. செல்வன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

    –மேகலா

  2. good article. Plain fact is, 95% of cholesterol is created by our own liver and only 5% is from our food.

  3. நன்றி மேகலா. ஆய்வுகள் பல சமயங்களில் நிகழ்வை பிரதிபலிப்பது இல்லை. 1 லட்சம் தலைமுறைகளாக கற்கால மனிதன் உண்ட உணவு நெருப்பில் சுட்ட மாமிசம், சில வேர்கள், பெர்ரிகள் இவ்ளோதான்.

    விவசாய யுகம் பிறந்து தானியம், கிழங்குகள் அறிமுகமானது 500 தலைமுறைகளாக. தீட்டிய வெள்ளை அரிசி, தீட்டிய கோதுமை, வெஜிட்டபிள் ஆயில், மைதா ரொட்டி, பாச்ட் புட், ஸ்கிம் மில்க் இன்ன டயட் உணவுகள் எல்லாம் அறிமுகம் ஆனது கடந்த மூன்று தலைமுறைகளாக.

    தானிய யுகம் துவங்கியவுடன் நமக்கு கிடைக்கும் மனித எலும்புகூடுகள் மனிதன் பரினாமரீதியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததை கூறுகின்றன. நம் உயரத்தில் ஆறு இஞ்சு குறைந்தது. இதய அடைப்பு, கான்சர், கொலஸ்டிரால், டயபடீஸ், பல் வியாதிகள் வர துவங்கின.

    ஒரு உதாரணம் வேண்டுமெனில் 8000 வருடத்துக்கு முன் இருந்த எகிப்து இன்றைய டயட்டிசியன்களின் சொர்க்க பூமிக்கு சமம். அன்று சர்க்கரை கண்டுபிடிக்கபடவில்லை, பிரச்ர்வேடிவ், கெமிக்கல், ஏன் உப்பு கூட கண்டுபிடிக்கபடவில்லை. கோக், பெப்சி, மெக்டானல்ட்ஸ் இல்லை. எகிப்தியர்கள் உண்டது முழு கோதுமையில் சுட்ட கோதுமை ரொட்டி, மீன். பூச்சிகொல்லி, உரம் எதுவும் கன்டுபிட்க்கபடாத காலக்ட்டத்தில் அன்று அவர்கள் உன்டது எல்லாம் ஆர்கானிக். அப்படி இருந்தும் மூன்றில் ஒரு பங்கு மம்மிகளுக்கு இதயத்தில் கொழுப்பு அதிகம் அடைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

    இன்று கொடுக்கபடும் பல டயட் அறிவுரைகள் நல்ல மனிதர்கலை நோயாளியாக்குபவை. உதாரணமாக குறைந்த விலையில் மாமிசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாக்டரி பண்ணைகளில் கோழிகளும், மாடுகளும் மக்காசோளம் கொடுத்து ஊதி பெருக்க வைக்கபடுகின்றன. மக்காசோளத்தில் கொழுப்பு சுத்தமாக இல்லை. ஆனால் அதை உண்ணும் மிருகங்கள் உடலில் கொழுப்பு ஏராளம் சேர்கிறது. அவற்றை கொழுக்க வைக்கதான் மக்காசோளம் கொடுக்கிறார்கள். இதில் ஒரு கொடுமை என்னவெனில் அதே சமயம் உடல் இளைக்கவும் மனிதர்களுக்கு கொழுப்பு இல்லாத மக்காசோளம் (corn flakes) பரிந்துரைக்கபடுகிறது. மிருகங்களை ஊதி கொழுக்க வைக்கும் உணவை மனிதனுக்கும் கொடுத்தால் அவனுக்கு உடல் பெருத்து, வியாதிகள் வராமல் என்ன வரும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *