குறிப்பறிந்து பொருளுணர்க

0

 

வருணன்

 
பொங்கி நுரைத்தபடி
பெருங்கடல் அலை சீற்றம்
அடையத் துடிக்கிறது கரையை

எல்லைகள் கடந்து வேலிகள் உடைத்து
புலம் பெயர்கின்றன
பெயரறியா பறவைகள்

முடிந்து விட்டதாய் மறந்து போன
நிலம் முட்டி முளைக்கின்றதொரு
சிறு தளிர்

உடைமைகள் சிதைத்து
உடையவர் உயிர் குடித்தடங்கும்
புயலுக்குப் பின் வருகிறதோர் அமைதி

இயற்கை தரும்
வாழ்க்கை பாடங்கள்
குறிப்பறிந்து பொருளுணர்க.

படத்துக்கு நன்றி: http://beautifulcoolwallpapers.wordpress.com/category/beautiful-natural-scene/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *