திவாகர்

இந்த ‘காலகட்ட’ ஆராய்ச்சிகளென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.நம்மாழ்வார் எப்போது பிறந்திருப்பார், திருவள்ளுவரின் காலம் என்ன, திருவள்ளுவருக்கு திருமூலர் முந்தியவரா பிந்தியவரா, மாணிக்கவாசகரின்காலம் தேவார மூவருக்கும் முந்தியதா என்பதெல்லாம் ஆராயப் பிடிக்கும்.அப்படித்தான் மாணிக்க வாசகர் பற்றிய காலகட்டத்தின் ஆராய்ச்சியொன்றினை என் வலைப்பகுதியில் தொடராக எழுதியுள்ளேன்.

ஆனால் இவையெல்லாம் வருங்காலம் இன்னமும் எளிதாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் எத்தனைதான் முன்னோரைப் பற்றி ஆராய்ச்சி செய்தாலும்சம்பந்தப்பட்டவராகவே வந்து நமக்கு சரிவரத் தெரிவிக்காவிடில் எல்லாமும் கணிப்புகளின் ஒரு பகுதிதான் என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நாம் எத்தனைதான் சந்தேகமற நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் தெளிவாக ஆராய்ந்து எழுதினாலும் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் கிடைக்காத மட்டில் இந்த ஆராய்ச்சிகள் அனைத்துமே மறு ஆராய்ச்சிக்கு உட்பட்டதுதான். உதாரணமாக நம் தேச தந்தை காந்தியடிகளின் வரலாறு ‘சத்திய சோதனை’ என்று அவரே கைப்பட எழுதியதுதான் அவரது காலக் கட்டத்தைப் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் எதிர்காலத்தவருக்கு சரியான செய்தியாகப் போய்ச் சேரும். ஒருவேளை காந்தி எழுதவில்லை என்றால் வேறு ஆயிரம் பேர்கள் காந்தியைப் எழுதினாலும் அத்தனை எழுத்துக்களும் மறு ஆய்வுக்குரியதே.

இந்த வகையில் பார்க்கும்போது டாக்டர் செம்மல் அவர்கள் ஒரு சிறந்த சேவையாக அறிஞர்களின் வாழ்க்கையை நேரடியாக அவர் வாய் மூலமாகக் கேட்டு அதைக் காலப் பெட்டகத்தில் பதிப்பது ஒரு பொறுப்பான சமூகப் பணியாகும். இதோ அவரது கோரிக்கை ஒன்று இந்த வாரத்தில் வல்லமை குழுவில் வெளிவந்தது.

Subject: Archiving Tamil Scholars Living in Madurai as on March 2013

Dear All,

Hereby the Scientific Tamil Foundation launches a new webpage title as http://www.tamillanguagearchives.blogspot.in/Kindly refer the names of the Scholars living in Madurai at present whom you believe may be added to this webpage. Viewing at the activities of the foundation, many may be of the opinion that it will be manned by a team; the reality is that – at present the foundation is manned only by me as a single person.
Shri. Manavai Mustafa, the founder of the foundation has donated rupees 10 lakhs (INR) (that which was given for nationalization of his
books) by the Government of tamilnadu to the foundation. With that corpus fund the foundation is able to proceed on various non
commercial ventures smoothly. Apart from this, every month I am funneling a part of my salary for the ventures.The foundation is registered with the Government and is ready to provide financial assistance for Tamil Development. Archiving will be done by me personally on Tuesday (26th March) (10:00 hours till 16:00 Hours)All the Processing, Recording , Video editing , Uploading will be done Free of cost. Refer the names of the genuine scholars to me as early as possible.

டாக்டர் செம்மலுக்கு நாம் அனைவரும் உதவுவோமாக.. எதிர்கால தலைமுறைக்குஒரு மிகச் சிறந்த சேவையாக இதைக் கருதி, இச் செய்லை மேற்கொண்டு வரும் டாக்டர் செம்மல் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு மனமுவந்து தேர்ந்தெடுக்கிறது. டாக்டர் செம்மல் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: ’மலர் சபா’ அவர்களின் சிலம்புத் தமிழ் காணிக்கையிலிருந்து

இனிய கதிர்களையுடைய
திங்களது போலும்
ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
அழகிய பற்களுக்கு
நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;

எனினும்

‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. டாக்டர் செம்மல் அவர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்!!

  2. ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை செயல்படுத்தி வரும் டாக்டர். செம்மல் அவர்களின் பணி மிகவும் பாராட்டத் தக்கது. அவருக்கு என் நன்றிகள்.

    “நான் அறிந்த சிலம்பு” என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தை எளிமைப் படுத்தி அனைவருக்கும் புரியும் நடையில் வழங்கி வரும் திருமதி. மலர்சபா அவர்களுக்கும் என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *