பி.தமிழ்முகில் நீலமேகம்

 

அன்னையும் பிதாவும்

கொடுத்த அறிவினை

சுடர் விட்டெரிய செய்யும்

தூண்டுகோல் !!!

 

கண்டிக்கும் வேளையில்

சற்று கரடு முரடு தான்

கற்றுத் தரும்

ஆசான்கள் எப்போதும் !!!

 

அவர்தம் உள்ளந்தனில்

மாணாக்கரின் நினைவுகள்

என்றென்றும் – நினைத்தாலே

இனிக்கும் கற்கண்டுகள் !!!

 

கற்ற கல்வியையும் -பெற்ற

அனுபவத்தையும் நாளும்

போதனை மூலம் உலகிற்கு

பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!

 

அன்றாடம் கற்பித்தலின் மூலம்

தானும் கற்றுக் கொண்டே

இருக்கும் வளர்ந்து விட்ட

பிள்ளைகள் -ஆசான்கள்!!

 

படத்திற்கு நன்றி :  http://teachingwithcontests.com/wp-content/uploads/2011/03/comp.jpg

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஆசான்

  1. ஆசான் என்னும் சூரியனிடமிருந்து அறிவு என்னும் ஒளியைப் பெரும் வெண்ணிலவுகளே மாணவச் செல்வங்கள் என்பதைச் சொல்லும் அழகான கவிதை. வாழ்த்துக்கள் திருமதி. தமில்முகில் நீலமேகம் அவர்களே.

  2. ஆசிரியத் தொழில் ஆம் சிறியத் தொழில் அல்ல !
    ஆசைவிரிய பணம்தேடும் பதவியும் அல்ல !!
    அன்னையாய் பின் தந்தையாய் பின் ஆசானாய்..
    முன் அனுபவத்தால் தெய்வமாய் கற்பித்த‌வைகள்
    பின்   வாழ்க்கையில் கற்றவைகள்   பெற்றவைகள்
    உன்னதமான உத்தமமான மேன்மை பொருந்தியது
    //*தானும் கற்றுக் கொண்டே வளர்ந்த மாணவர்கள்  -ஆசான்கள்!! *//
    ஆனால் இன்று பள்ளி-ஆசான்-மாணவர் உறவு 
    பேருந்தின் பயணச் சீட்டைப் போல  
    Recommendation Donations  Fees  Tutions  
    நாம் மாற்றபட்டு கொண்டிருக்கிறோம் ??

  3. // *ஆனால் இன்று பள்ளி-ஆசான்-மாணவர் உறவு
    பேருந்தின் பயணச் சீட்டைப் போல
    Recommendation Donations Fees Tutions
    நாம் மாற்றபட்டு கொண்டிருக்கிறோம் ??*

    ஆம் சகோதரி.இந்நிலை எங்கு போய் முடியுமென்றெண்ணும் போது சற்று கலக்கமாய்த்தான் உள்ளது.நாளை வரும் நாட்களில் கல்வி, பொருள் படைத்தோர் வீட்டுச் சொத்தானாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி சகோதரி !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *