மலர் சபா

 

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

(35)
பிரியேன் என்று
அன்று சொல்லிச் சென்ற
அன்பு பொருந்திய காதலரின்
உருளையுடைய பெரிய வலிய தேர்
சென்ற வழியது சிதையும்படி
பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

குளிர்பூக்கள் கொண்ட சோலையே!
துணையுடன் கூடி மகிழும் அன்னமே!
ஈரம் பொருந்திய குளிர் நீர்த்துறையே!
இங்ஙனம் எமைப் பிரிதல் தகாது என்று
அவரிடம் உரைக்க மாட்டீரோ!

(36)

பிரியேன் என்று
அன்று சொல்லிச் சென்ற
அன்பு பொருந்திய காதலரின்
உருளையுடைய பெரிய வலிய தேர்
சென்ற வழியது சிதையும்படி
பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

நீ வாழ்வாயாக!
முன்பு எம்முடன் அன்புடன்
உறவாடியிருந்த கடலே!
இன்று உன் செயலால்
உறவு கெடப் பகைமை ஆனாய்!
என்றாலும் நீ வாழ்வாயாக!

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01234l3.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *