வீட்டு
மூலையில்
நூலாம்படையொன்று
ஒய்யாரமாய்
ஆடியாடி
பசப்பிக் கொண்டிருந்தது
புகலிடம் தருகிறேன்
வாருங்கள் பூச்சிகளே!
அருகிற்சென்று
நோக்குகையில்
அது சொல்கிறது
உமக்கு
இங்கு இடமில்லை
எம்மிலும் கொடிய
களங்கிய இனத்தைச்
சார்ந்தவர் நீர்!!
சடுதியில்
காலை விட்டெறிந்து
இல்லாதொழித்துத்
திரும்பும்போதுதான்
வந்து அறைகிறது
சொன்னது சரியோ?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மனிதன்

  1. உண்மை சில நேரங்களில் கசக்கும். என்ன செய்வது நூலாம் படை சொன்னது மிக்க சரி.

  2. இனி ஒவ்வொரு முறை நூலாம்படையை நோக்குந் தோறும்  நெஞ்சில் ஒரு கணம் வந்து மோதும் இந்தக் கவிதை. வரிகளிலிருந்து மீள முடியவில்லை. பகிர்விற்கு மிக்க நன்றி.

Leave a Reply to பார்வதி இராமச்சந்திரன்.

Your email address will not be published. Required fields are marked *