வந்து விட்டது வசந்த காலம் !!!
பி. தமிழ்முகில் நீலமேகம்
இலையுதிர்த்த மரங்களெல்லாம்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க
மகரந்தங்களைத் தேடி மலர்களை
சில் வண்டுகள் ரீங்கரிக்க
குறுகிய காலத்துள் –
மரக் கிளைகளில்
இலைகள் துளிர்த்திருக்க
உதிர்ந்த மலர்கள்
நிலமெங்கும் மலர் மஞ்சம்
அமைத்திருக்க –
எங்கெங்கு காணினும்
மஞ்சள் மகரந்தங்கள்
மங்களம் பரப்பிட
கூடவே ஒவ்வாமையையும்
இலவச இணைப்பாய்
அள்ளி வழங்கிட
உற்சாகமூட்டும் வண்ணங்கள்
நம்மைச் சூழ்ந்திருக்க
பறவைகள் பரவசமாய்
வானில் இசைபாடி
வலம் வர – உறக்கத்திலிருந்த
அணில்களும் முயல்களும்
உற்சாகமாய் துயிலெழுந்து
துள்ளியோட – வந்து விட்டது
வசந்த காலம் !!! – எங்கெங்கும்
உற்சாகமும் இன்பமும்
சூழ்ந்திருக்கவே !!!!
அணில்களும் முயல்களும் துள்ளி விளையாடும் வசந்தத்தின் வருகை அருமை!
வாழ்த்துக்கள் திருமதி.தமிழ்முகில் நீலமேகம் அவர்களே!
எங்கெங்கு காணினும்
மஞ்சள் மகரந்தங்கள்
மங்களம் பரப்பிட
கூடவே ஒவ்வாமையையும்
இலவச இணைப்பாய்
அள்ளி வழங்கிட////
எதார்த்தத்தையும் சேர்த்தே வந்த இவை நான் ரசித்த வரிகள்.
@திரு.சச்சிதானந்தம்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் திரு.சச்சிதானந்தம் அவர்களே !!!
வசந்த காலத்தின் வருகைக்குக் கட்டியம் கூறும் இனிய இயற்கைக் காட்சிகளை அழகிய வரிகளில் வடித்தெடுத்திருக்கும் திருமதி. தமிழ்முகில் நீலமேகம் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!!
@திரு. தனுசு
தாங்கள் என் கவிதையை இரசித்துப் பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் !!!
@ மேகலா இராமமூர்த்தி
தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி…