மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

(39)

புலால் நாற்றம்
தன் மீது பொருந்தியிருக்க
அதற்கென வருந்தி
அந்நாற்றம் நீக்க எண்ணி
பொழிற்சோலையது புகுந்து
ஆங்கே உதிர்ந்து நின்ற
பூந்தாதுகளின் கலவையை
மணம் கமழவெனத்
தன் மேல் பூசிக்கொண்டு நிற்கின்ற
அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
நெய்தல் நிலத் தலைவனே!

பலவிதமான துன்பங்கள் உற்று வருந்துவதால்
இது இன்ன நோய் என்று அறியாமல்
எம் தலைவிதானும் தனித்துத் துன்புறுகிறாள்.
இவள் மெலிவதும் இரங்குவதும்
பிறர்க்குப் புலப்படவில்லை என்பதால்
எவரும் உண்மை அறிந்திலர்.
இதனைத் தாய் அவள் அறிந்திட்டால்
என்னதான் நான் செய்வேன்?!

“பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தல்”

(40)

மெல்லிய இருள் படர்ந்ததுவே;
பகல் பொழுது தரும்
கதிரவன் அவனும் மறைந்தனனே;
நீக்கிட முடியாத தனிமைத் துன்பத்தால்
என் கண்கள்தானும் நீரைச் சொரிகின்றனவே;

மொட்டவிழ்ந்த மலர்கள் அணிந்த
கூந்தலை உடையவளே!
வளையல் கழன்று விழும்படி
காமம் எனும் தீ கொண்டுவந்த
இம்மாலைப் பொழுது
நம்மைப் பிரிந்து சென்ற
தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமோ?!

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

படத்துக்கு நன்றி:
http://arulalantamizh.blogspot.com/2012/07/4-971.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *