மலர் சபா

 

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

**
*(43)*
**
*”சாயல் வரி”
“மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி
இயற்பழிக்க, தலைமகள் இயற்பட மொழிதல்”*

தாழையை வேலியாகக் கொண்ட
இக்கழியில்
முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
நாம் விளையாடிய
பொய்தல் விளையாட்டை
மறக்க வைத்துச் சென்ற அவர்
நம் மையல் கொண்ட
மனத்தைவிட்டு நீங்கி அகல்வாரல்லர்.

*(44)*

கடற்கரைச் சோலையை
வேலியாகக் கொண்ட
இக்கழியில்
முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
‘நீ அருள்செய்வாய்” என்று
வேண்டி நின்றிருந்த அவர்
நம் மான் ஒத்த பார்வையை
மறப்பாரல்லர்.

*(45)*

நேற்றைய நாளில்
அன்னம் தன் துணையுடன்
விளையாடக் கண்டிருந்தார் ஒருவர்.
அதனையே நோக்கி நின்றிருந்த அவர்,
பொன்னிறத்தில் நம் மேனிமீது
படர்ந்திட்ட பசலை போல
நம்மை விட்டு நீங்குவாரல்லர்.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html>
படத்துக்கு நன்றி:
http://www.gunathamizh.com/2011_06_06_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *