75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து இளைஞர்கள்- மாணக்கர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல் போன்ற எவ்வெவற்றை எங்களிடம் தமிழ் ஆர்வலர்களும்,சுவைஞர்களுமாகிய நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என சுருக்கமாக இருபக் கஅளவில் எழுத்து வடிவில் ஒரு வரைவுத் திட்டம் ( அஞ்சல் குறியீட்டு எண், தொலைபேசி எண், உள்ளடக்கிய தங்கள் முழு முகவரியுடன்) 20.07.2013 ஆம் தேதிக்குள் நேரிலோ அஞ்சலிலோ தந்துதவ மிகப் பணிவுடன் வேண்டுகின்றோம். கூட்டத்திற்கு வர இயலாதவர்களும் வெளியூர் அன்பர்களும் அஞ்சலில் அனுப்பிஉதவிடுக. இவை தொகுக்கப் பெற்று 3.8.2013 அன்று 7-9-2013 அன்று நடைபெறும் மாதக்கூட்டத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகக் கூட்டப் பெறும். அஞ்ஞான்று விரும்பும்தமிழ் ஆர்வலர்கள் எவரும் பங்கேற்று உரையாடி பைந்தமிழ்ப் பணியில்பங்கேற்க அழைக்கிறோம்

முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அ்ரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
மற்றும்

காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மைய உறுப்பினர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *