அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!..7

0

 

சாகர்


எகிப்திய அருங்காட்சியகம்

 

நான்காயிரம் வருட தொன்மையான பொருட்களை உள்ளடங்கிய அருங்காட்சியகம் என்பதால், புகைப்படம் மற்றும் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை. கையில் இருந்த கேமராக்கள் மற்றும் காம்கார்டரை வாயிலில் உள்ள அலுவகர்களிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாரிஸில்(Paris) உள்ள லூவ்ரு(Louvre), லண்டனில் உள்ள பிரிட்டிஷ்(British Museum) அருங்காட்சியகங்களை முன்பே பார்த்திருந்ததால் எகிப்திய கலைப்பொருட்களை பற்றி ஓரளவு இருந்த ஆர்வம், லண்டனில் துடுக்கமன்(Thutukhamun) மன்னரின் புதையல் பொருட்காட்சியை பார்த்தபின் இன்னும் அதிகமாயிற்று. இப்போது அவை எல்லாம் தோன்றிய இடத்தில உள்ள அருங்காட்சியகம் என்பதால், இது எப்படி இருக்கும் என்ற ஆவல் தூண்ட துரிதமாக உள்ளே போனோம்.

கைரோ அருங்காட்சியத்தில் நுழைவு சீட்டு மம்மிகளின் அறைக்கு அனுமதி வழங்குவதில்லை அதற்க்கு தனி சிறப்பு கட்டணம். இவ்வளவு தூரம் வந்தாயிற்று அவற்றையும் பார்போம் என்று அதையும் வாங்கினோம்.

எங்கோ பார்த்தாலும் ஸ்பின்க்ஸ் உருவங்கள். அருங்காட்சியகம் எகிப்திய வரலாற்றின்படி பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.எங்கள் வழிகாட்டி இந்த கலை கண்காட்சியை பார்க்க ஒரு மாதம் இருந்தாலும் போதாது எனவே நான் மிக முக்கியமானவை மற்றும் காட்டுகிறேன் மேற்கொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதை சுற்றி பாருங்கள் என்றார்.

முதலில் எங்களை எகிப்திய தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்ட பல அயல் நாடு தொல்பொருள் ஆராய்சியாளர்களில்  சிலைகளை காட்டினார், கார்டர்(Carter), சாம்பியன்(Champillon) போன்ற இந்த மேதைகளை கடந்து உள்ளே சென்றோம்.

ஒரு பெரிய படகு இருந்தது, செடார் (Sedar) மரத்தில் அமைக்கபற்ற இந்த படகு சுமார் நான்காயிரம் ஆண்டு தொன்மையானது. அஸ்வான் பாறைகளை நைல் நதியில் கொண்டுவந்து பிரமிடுகளை கட்ட உபயோகிக்க பட்டதாம் இந்த படகுகள்.

பிரமிடுகளை கட்டிய குப்ர்(Khufre), மேன்கோவ்ரே(Menkuare) போன்ற பாரோக்களின் சிலைகளை பார்த்தபோது, இதுபோல் நமது நாட்டில் நம் மன்னர்களில் உருவங்கள் இன்று இல்லே என்று தோன்றியது.

கிறிஸ்துவிற்கு 3100 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நார்மர்(Normar) மன்னரின் சிலைவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் முதல் முறையாக மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை முதல் முறையாக ஒரு தேசமாக ஆண்டவர், இவர்.

திரும்பிய பக்கம் எல்லாம் பாரோக்களின் உருவங்கள் சிறுதும் பெரிதுமாக நின்றும்,அமர்ந்தும், படுத்தும் காணப்பட்டன.அவற்றில் ராமேசெஸ்ஸின் (Rameses) உருவச்சிலைகள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவற்றில் பாரோ (Pharoh) சிறுவனாக விரல் சூப்பும் காட்சி அழகாக இருந்தது.

மம்மிகளின் சிறப்பு அறைக்கு அடுத்ததாக சென்றோம். 4000, 3000 வருடங்களுக்கு முன் ஆண்ட அந்த அரசர்கள் மற்றும் அரசிகளின் உடல்கள் மம்மிகளின் வடிவில் இன்னமும் பதப்படுத்திய நிலையில் காட்சியளித்தன. ஒரு சவக்கிடங்கு போன்ற ஒரு காட்சியளித்தாலும், எகிப்திய மருத்துவ கலாச்சர மகத்துவத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இறந்தவரின் உடலை கோவிலின் குருமார்கள் அறுத்து உள்ளே உள்ள இருதயம், குடல், நுரையீரல் போன்றவற்றை எடுத்து தனித்தனி ஜாடிகளில் பதபடுத்தி வைத்தனர். பின்னர் உடலை பலவேறு முலிகை மற்றும் வாசனை பொருட்களை கொண்டு பதப்படுத்தி,துணி கொண்டு சுற்றி பதப்படுத்தினர். உடலை சவப்பெட்டியில் வைத்து மூடி,  அதனை சமாதி கையில் அல்லது பிரமிடுகளில் வைத்தனர். கூடவே ஜாடிகளில் உள்ள மற்ற அங்கபாகங்களையும் வைத்தனர்.

அழுகும் அபாயம் உள்ள பாகங்கள் இல்லாமல் பதப்படுதபட்ட இந்த மம்மிகள் சுருங்கி மரப்பாச்சி பொம்மைகள் போல் காட்சியளித்தன.ஆயிரகணக்கான வருடங்களுக்கு முன் இறந்தாலும் இவை இன்றும் வரலாற்றின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

மூன்றாம்  ராமேசெஸ் மன்னரின் மனைவி அவரை கொல்ல ஆள்வைத்து முயற்சித்ததாக வரலாறு. அவர் மம்மியை ஸ்கேன் செய்து அவர் குரல்வளை அறுக்கப்பட்டு இறந்தார் என்று இன்று உறுதி செய்து ஆயிரக்கணக்கான வருட கொலைக் கதைக்கு முடிவுரை எழுதின.

சிறு வயதில் இறந்த துடுகமுன் அரசர் மிகவும் சிறப்பானவர் ஏன் என்றால் அவர் இரவு கோயிலில் கணக்கில் அடங்காத புதையல் மற்றும் புராதன பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. இவர் சிறுவயதில் இறந்ததால் இவர் விஷம் கொடுத்துகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வரலாறு. சமிபத்தில் இவர் மம்மியை பரிசோதனை செய்து இவர் கால் எலும்பு முறிந்து இறந்தார், விஷம் உட்கொண்டதற்க்கு அறிகுறி இல்லை என தெரிய வந்தது.

மம்மிகளின் அறையில் இரண்டாம் ரமேசிஸ்(Rameses), டுத்மொசிஸ்(Thutmosis), அவர் அன்னை ஹத்ஷேபுட்(Hatsheput) மற்றும் பல எகிப்திய மன்னர்களின் உடல்கள் மட்டுமன்று பல்வேறு மிருகங்கள் மற்றும் பறவைகளும் பதப்படுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பறவைகளும் மிருகங்களும் ஆயிரகணக்கான வருடம் பழமையானவை.  இறந்தவரின் பரலோக யாத்திரைக்கு துணையாகவும் உணவாகவும் இவை அமைந்தனவாம்.

இந்த கதைகளை கேட்டறிந்தவாறு மெல்ல துடுகமுன் ராஜாவின் விசேஷ புதையல் கட்சி பகுதிக்கு வந்தோம். கார்ட்டர் என்னும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் கண்டு பிடித்த இந்த அரசரின் இரவு கோயில் மிகவும் விஷேசமானது. அரசர்களில் பள்ளத்தாக்கு (Valley of Kings) என்றழைக்கப்படும் இடம் லக்சர்(Luxor) அருகில் உள்ளது. மற்ற கோயில்களில் இருந்த பொக்கிஷம் பொறும எல்லாம் திருடர்களால் களவாடப்பட்ட நிலையில் இந்த கோயிலில் ஆண்டு புதைத்த மேனிக்கு தங்கமும், பொக்கிஷங்களும் அப்படியே இருந்தன.

இவற்றில் அந்த மன்னரின் மம்மி, மற்றும் தங்க முகமூடி அச்சு(Facemask), அவரை புதைத்த சவப்பெட்டி எல்லாம்  சிறிதளவும் சிதலமடையாமல் கிடைத்தன. மன்னரின் மம்மி அவர் உடல் அளவில் ஒரு பேட்டியின் வைக்கப்பட்டு அந்த பெட்டி மற்றும் ஒரு பெரிய வேலைப்பாடு கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டு. கடைசியாக இவை ஒரு தங்க மூலம் பூசபட்ட ஒரு பெரிய பெட்டியில்(Sacrophagus) வைக்கபட்டிருந்தது. மன்னரின் உடல் பகுதிகள் முன்னர் குறிப்பிட்டது போல் பளிங்கினால் ஜாடிகளில் வைக்கபட்டிருந்தன.

மன்னரின் தங்கமுகமூடி 11 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்டது. எகிப்தின் புராதன கிரீடமும் ஒட்டுதாடியும் கொண்ட இந்த குழந்தை முகம் பார்ப்பவரை வசீகரிக்கும் சக்தி கொண்டது.

துடுகமுன் அரசரின் சிங்க சிங்காசனம், தேர், செங்கோல் மற்றும் கிரீடம் போன்றவையும் கண்டேக்கபட்டன. இவை அனைத்தும் ஓரிடத்தில கட்சி அளிப்பது கண்கொள்ள கட்சி. ஏற்கனவே லண்டனில் ஒரு முறை பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கும்போதும் அலுப்பு தட்டவே இல்லை.

நேரம் போவது தெரியாமல் இந்த கலை பொக்கிஷங்களை பார்த்து கொண்டேயிருக்க மஹ்மூத் வந்து காட்சியகம் மூடும் தருணம், நாம் போகவேண்டும் என்றார்.

வண்டியில் ஏறியதும் நாம் இப்போது எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த கான் அல் கலிலி(Kahn el Khalili Bazaar)அங்காடி போய் சிறிது நேரம் செலவிடலாம். அதன் பின்னர் உங்களை கீஸா(Giza) ரயில் நிலையில் லக்சர் செல்லும் இரவு வண்டியில் கொண்டு ஏற்றிவிடுகிறோம் என்றார். (தொடரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *