மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?
சித்திரை சிங்கர்
தமிழக மின்வாரியம் இப்போது ஒழுங்காக தங்கள் வாடிக்கையாளர்களின் (மக்கள்) நலனில் அக்கறையுடன் செயல் படுகிறதா என்றால் இல்லை என்ற குரல்தான் தமிழகம் எங்கும் ஒலிக்கும்..! கடந்த திடீரென இத்தனை வருடங்கள் அரசியல்வாதிகள் தங்களின் ஒட்டு வங்கி குறையகூடாது என்பதற்காக இதுவரையில் உயர்த்தப்படாத மின்கட்டணங்களை ஒரேயடியாக உயர்த்தி தங்கள் வாடிக்கையாளர்களை வேதனைபடுத்தி மின்வாரியம் தனது வசூலை மேம்படுத்தியது. அனால் அடிக்கடி பவர் கட் ஆவதற்க்கு மின் உற்பத்தி முறையாக மேம்படுத்தப்படவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் ஒவ்வொரு ட்ரான்ஸ்பார்மர்களையும் சரிவர பராமரிக்கதேவையான மாற்று உபகரணங்ககளும் இல்லை. புதிய இணைப்புக்களுக்கு தகுந்தவாறு இப்போதுள்ள ட்ரான்ஸ்பார்மர்களை மேம்படுத்தும் அக்கறை மின்வாரிய நிர்வாகத்துக்கு இல்லை.வெளிநாட்டு அலுவலகங்கள் புதியதாக திறக்க வைத்து புதிய இணைப்புக்களை சத்தமில்லாமல் பல இடங்களில் சலுகை கட்டணத்தில் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு உண்டான கட்டணங்கள் கூட சமீபத்தில் கூட தொலைக்காட்சி செய்தியில் மீண்டும் ஒரு யூனிட்டுக்கு 17 பைசா உயர்த்த போவதாக செய்தி வந்துள்ளது. விலைஉயர்வு தடுக்கப்பட முடியாது என்றாலும் இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரேயடியாக முட்டாள்கள் ஆக்குவதுதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாதாமாதம் நாம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு உரிய கட்டணத்தை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது 15ந்தேதிக்குள் வசூலிக்கும் விதமாக செயல்படாமல் இரண்டு மாதத்துக்கு
ஒரு முறை வசூலிப்பதால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிக கட்டணங்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. கேட்டால் மாதாமாதம் ரீடிங் எடுக்க மின் வாரியத்தில் தேவையான பணியாளர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இதற்க்கு பொதுமக்கள் பலியாவது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. மாத சம்பளம் வாங்கும் பொதுமக்கள் எப்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களை செலுத்த முடியும்…? அதுவும் அவ்வப்போது “டெபொசிட் கட்டணம்” என்று ஒரு கணிசமான தொகையினை சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள்..ஏற்கெனவே கோடை வெயிலின் காரணமாக மின் உபயோகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தமாதமும் அடுத்தமாதமும் சம்பளம் முழுவதையும் மின்கட்டன்மாக செலுத்தவேண்டிய நிலையில் பொதுமக்களில் பலர் உள்ளனர். இத்தகு நிலைமை மாற வேண்டும்….! இப்போதும், பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் மாதாமாதம் மின் கட்டணங்களை வசூலிப்பது போல தமிழகத்திலும், முன்னம் வசூலித்தது போலவே மீண்டும் மாதாமாதம் மின் கட்டணங்களை வசூலிக்க மின்வாரியம் முன் வரவேண்டும். மாதாமாதம் சென்று மீட்டர் ரீடிங் எடுக்க தேவையான பணியாளர்கள் இல்லை என்றால் ரீடிங் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என்றாலும் பொதுமக்கள் வீடுகளில் மாதமாதம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கே கணக்கீடு செய்து இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வசூலிக்க மின்வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமா…? இப்போது புதியதாக பொருத்தபடும் புதிய “டிஜிட்டல் மீட்டர்கள்” துல்லியமாக மின் அளவை கணக்கிடும் என்று பார்த்தால், அவைகள் முந்தய அளவில் வீடுகளில் மின்சாரத்தை உபயோகித்தாலும் இந்த புதிய
டிஜிட்டல் மீட்டர்கள் தனது கணக்கீடுகளை சுமார் 10 முதல் 20% அதிகமாகவே காட்டுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே….!பொதுமக்களின் நியாயமான உரிமைகளை மின்வாரியம் மதிக்க வேண்டும் அவர்கள் வசதிக்காக மக்களை “பலி கடா” ஆக்குவது நல்ல இல்லை….! மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?
ஒரு பொதுஜன பிரச்சினை பதிவுக்கு வந்ததில் மிக்க மகிழ்சி. இது போன்ற வாத பிரதிவாதம் வல்லமையில் வந்தால் இன்னும் விரிவாக்கம் இருக்கும். தொடரட்டும் இது போன்ற பதிவு.
nantri. mr.dhanush