Madhumitha_RS_Mani

கவிதாயினி மதுமிதாவின் ‘தனிமை ஒரு வரமே’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி.

மிக உருக்கமான அந்த இனிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.

இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே:

தனிமை ஒரு வரமே

தனிமை ஒரு வரமே – மனமே
தனிமை ஒரு வரமே
இனிமை அது தருமே – உனக்கு
இனிமை அது தருமே

தன்னையே அறிந்து கொள்ள
தன்னிலை உணர்ந்து கொள்ள
தண்ணென்ற அமைதியும் சேர
தானாய் அமையும் அந்த தனிமை       (தனிமை )

ஆயாசம் துடைத்துப் போக்க
அகிலம் முழுவதும் அணைக்க
அன்பும் உள்ளத்தில் ஊற
அருகில் நெருங்கும் அந்த தனிமை     (தனிமை )

இயற்கையை இனிதே ரசித்து
இயைந்த மனதுடன் நெருங்கி
இணைந்தே என்றும் களிக்க
இயல்பாய் இசையும் அந்த தனிமை     (தனிமை )

(02.07.2007)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தனிமை ஒரு வரமே

  1. தனிமை ஒரு வரமே என்ற பாடல் இசையுடன்
    பதிவு செய்யப்பட்டதைக் கேட்க இனிமையே!
    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *