விடுகதை!…
புதுவைப்பிரபா
சட்டைப்பாக்கெட்டிலிருந்த செல்போன் அதிh;ந்ததும், அன்னாh;ந்து சுவா; கடிகாரத்தை பாh;த்தேன். அது 5:35 என்று காட்டியது. அந்த அழைப்பு அமரனிடமிருந்துதான் என்று தொரியும் எனக்கு. “அமரா. . . . . கௌம்பிட்டியா? சாரி நானும் தோ ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்”.
பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளை அப்படியே மூடி மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புறப்பட்டேன். ஆமாம். எப்படிப்பட்ட முக்கியமான வேலையில் மூழ்கியிருந்தாலும் , அமரனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டால், அவ்வளவுதான். அதற்கு பின் எதிலும் நாட்டம் கொள்ளாமல், அவனை சந்திப்பதை நோக்கியே மனம் சிந்திகத்தொடங்கிவிடும். சும்மாவா! இருபத்திதைந்தாண்டு கால நட்பாயிற்றே!
“சார்!. . . ரூம போட்டிடலாமா? திரும்பி வருவீங்களா?” வாட்ச் மேன் கேட்டான்.
“ இல்ல இல்ல அப்படியே போயிட வேண்டியதுதான்” என்றேன்.
‘‘சார்! நான் சொல்லேறன்னு தப்பா நெனைக்காதீங்க. இனிமே, ‘அப்படியே போயிடுவேன்னு’ சொல்லாதீங்க சார். நல்லா இல்ல! அதையே வேற மாதிரி சொல்லுங்க.” முகத்தை இருக்கமாக வைத்துகொண்டு சொன்னான்.
“ஐயையோ! சார்..விடு. நான் வாக்கிங் போயிட்டு, அப்படியே வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு காலையில வா;றேன். போதுமா? “
அவன் குனிந்து கொண்டே தலையசைத்தான்.
‘வார்த்தைகளிலா வாழ்;க்கை இருக்கிறது? போயிடுவேன் என்றால்.. போய்விடுவேனா? அவன் ஏன் அப்படி பயப்படுகிறான்?’ என்று சிந்தித்துக் கொண்டே வழக்கமாக வண்டியை விடும் இடத்தில் விட்டுவிட்டு காந்தி சிலையை நோக்கி நடந்தேன்.
அலுவலகம் முடித்துவிட்டு மாலையில் கடற்கரையோரம் அரைமணிநேரம் நடந்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கத்திலிருந்தது. வேலை அதிகம் இருக்கும் நாட்களில், நடையை முடித்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கே சென்று எட்டு எட்டரை வரை வேலை பார்த்துவிட்டு போவேன். அந்த அர்த்தத்தில் வாட்ச்மேன் கேட்கப்போய்தான்
அமரன் எனக்கு முன்பே வந்து அமா;ந்திருந்தான். மற்றவா;களைப்போல மாலையில் நடந்தால் உடலுக்கு நல்லது என்பதற்காக இல்லாவிட்டாலும்;. அமரனோடான அந்த அரைமணிநேரம் சந்திபிற்காகவே தவறாமல் வருவதுண்டு. இந்த மாலை சந்திப்பு குறித்து இதே உணா;வு இருப்பதாக அமரனும் சொல்லியிருக்கிறான்.
வாடா. .. . என்ன . . . சிரிச்சுக்கிட்டே வாற. .. . ?” அமரன் கேட்டான். வாட்ச்மேன் சொன்னதைச் சொன்னேன்.
‘‘ஆமாம்டா. வாழ்க்கை குறித்த பயத்தோட வாழறவங்தான் இங்க அதிகம். ஒருத்தனோட வாழ்க்கை துஎதுலியோ இருக்கிறதா நம்பறாங்க. ‘போறேன’;னா..‘போய்ட்டுவா;றேன்’னு சொல்லுங்கம்பாங்க. கல்யாணம் ஆவற மாதிரி கனவு கண்டா.. எழவு விழும்ன்னு அடிச்சி சொல்லுவாங்க. தோபாரு.. ரெண்டு வருஷமா நாம தொடா;ந்து பீச்சுக்கு வா;றோம். ‘வாக்கிங்’ போற கூட்டம் எப்படி பெருத்துகிட்டே வருது பார்;த்தியா? எல்லோர்க்கும் உயிர் பத்தின பயம் அதிகமாயிகிட்டேபோகுது!”
‘‘சாரி அமரா, அந்த பயம் தப்புன்னு சொல்றியா?
“தப்புன்னு சொல்ல. வாழற எல்லோருக்குமே சாவற ரிஸ்க் இருக்கறப்போ அதையே எதுக்கு சிந்திச்சுகிட்டு இருக்கனும். நிச்சயமா, உயிரோடு இருக்ககிறவரைக்கும் சாவு வரப்போறதில்ல. அப்புறம்? போறதுக்குள்ள எதையாவது உருப்படியா குடும்பத்துகோ தெருவுக்கோ ஊருக்கோ, நாட்டுக்கோ, உலகத்துக்கோ, செய்ய முடியாமான்னு பார்க்கிறத விட்டுட்டு ‘ஐயையோ! நாம செத்துடபோறோம்ன்னு’ பயந்து பயந்து வாழறது, ஒரு வாழ்க்கையா?”
“சாரி அமரா. அதவிடு. எதுக்கு அந்த சீhரியசான டாப்பிக். அப்புறம் காஞ்சனாவுக்கு ஏதோ டெஸ்ட்டெல்லாம் எடுக்க சொன்னாங்கன்னியே.. எடுத்தாச்சா?”
“அத ஏன்டா கேக்குற? அவளுக்கு எடுக்கப் போய், ‘ஏங்க உங்களுக்கும் நாற்பது வயசு ஆயிடுச்சி. நீங்களும் எடுத்துக்கோங்கன்னு அடம்பிடிச்சா.”
‘‘குட். எடுத்தியா? இல்லியா?”
‘‘எடுத்தேன்எடுத்தேன். சுகா;, பி.பி, கொலஸ்ட்ரால்எல்லாமே நார்மல். இன்னும் சொல்லப்போனால், அவளவிட எனக்கு எல்லாம்; கரைக்ட்டான லெவல்ல இருக்குது.”
“ஓ.கே. ஓ.கே”
‘‘என்னடா ஓ.கே. இந்த டெஸ்டுக்கெல்லாம்கூட உயிர்பத்தின பயம்தான் காரணம்?”
என் சட்டைப்பையில் இருந்த செல்போன் அதிர்ந்தது. எடுத்து பேசி முடித்ததும், அமரன் எhரிச்சலோடு, ‘ ஏன்டா. . . எத்தனைதடவ சொல்றது? சைலன்;ட் மோடுல போட்டு, பாக்கெட்ல வைக்காதேன்னு. அந்த வைப்ரேஷன் ரேடியேஷன் உடம்புக்கு நல்லதில்லஹார்ட்அட்டாக் வருதுன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது.”
‘‘இல்லப்பா. ஆபிஸ்ல, சைலன்ட்டல போட்டு வைக்கிறேனா..அத மாத்தியிருக்கனும்..மறந்துட்டேன்.”
‘‘ சரி. யாரு போனுல ? யாருடா ஆஸ்பிட்டல இருக்கா?” அமரன் ஆர்வமாய் கேட்டான்.
“விழுப்புரத்திலந்து சித்தப்பா பையன் பேசினான். சித்தப்பாவுக்கு உடம்பு முடியலேன்னு ஆஸ்பிட்டல்ல சேர்த்தாங்கலாம். பல்ஸ் கொறஞ்சிகிட்டே போவுது.. சொல்லவேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டாங்கலாம்.”
“நீ போய், பார்த்துட்டு வரப்போறியா? ஏன் கேட்கறேன்னா.. அவரு மூணு மணிநேரத்துல இல்ல மூணுமாசம் ஏன்?? மூணு வருஷம் கூட உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு”.
‘‘டேய்அவருக்கு வயசு ஏழுபத்தி ரெண்டு ஆகுதுடா”
“ஆகட்டும்வயசுக்கும் சாவறதுக்கும் சம்மந்தமில்லடா. எண்பது வயசு, தொண்னூரு வயசுன்னு யாரும் வாழறதில்லையா? ஏன் சொல்றேன்னா எங்க வீட்டு பக்கத்தில ஒரு பொரியவரு இன்னிக்கு போயிடுவாரு நாளைக்கு போயிடுவாருன்னு எட்டு வருஷமா இருக்கார்.”
‘‘அதுக்கு என்ன காரணம்ன்னு நீ நெனைக்கிறே?”
‘‘நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புhரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை. சரி..நீ விழுப்புரம் கௌம்பனுமில்லபுறப்படலாம்…”
விழுப்புரம் மருத்துவமனைக்கு வந்து சோ;ந்தபோது மணி ஒன்பது. மருத்துவமனை என்றாலே எனக்குள் ஒருவித பதட்டம் தொற்றிக்கொள்ளும். அதனாலோ என்னவோ எனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருந்தது.
‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்..’ என்று வாட்ச்மேன் சொன்னதும், ‘செல்போன அங்க வைக்காதடாஹார்ட் அட்டாக் வருதாம்’ என்று அமரன் சொன்னதும் தேவையில்லாமல் நினைவுப்பரப்பில் வந்து நிழலாடியது.
“அண்ணே வந்துட்டீங்களாண்ணே? இல்லண்ணே! ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அதே டாக்டா; திரும்ப வந்து, ‘இட் ஈஸ் எ மெடிக்கல் மிராக்கல் அவரோட பல்ஸ் இம்ப்ரூவ் ஆயிடுச்சு. அவரு சீக்கிரமே நார்மலுக்கு வந்துடுவார்ன்னு சொல்லிட்டு போயிட்டாருண்ணே!’ தலையை சொறிந்துகொண்டே, சித்தப்பா மகன் சொன்னான்.
“சரிப்பா.. நல்ல விஷயம்தானே! இருக்கட்டும்”; என்று சொல்லிவிட்டு, சித்தப்பாவை அருகில் சென்று பார்த்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த போது, “அவரு மூணு மணிநேரத்துல இல்ல மூணுமாசம் ஏன்?? மூணு வருஷம் கூட உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு” அமரன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஏனோ பெருமையாக இருந்தது. சம வயதாக இருந்தாலும்கூட, உயிர் பற்றியும், வாழ்க்கைப்பற்றியும் அவனுக்கு தெரிகிற அளவிற்கு, அல்லது அந்த தத்துவம் புரிகிற அளவிற்கு நமக்கு புரியவில்லையே! ம்ம்.. என்று பெருமூச்சு விட்ட நொடியில், பாக்கெட்டினுள் செல்போன் அதிர்ந்தது.
ஐயோ! நல்ல வேள அமரன் பக்கத்துல இல்ல’ என்று சிந்தித்துக்கொண்டே கையில் எடுத்தபோது, செல்பேசி திரையில் அமரன் என்ற பெயா; ஒளிர்ந்தது. சித்தப்பா பற்றி விசாரிப்பதற்காய் இருக்கக்கூடும் என்று எடுத்தேன். எதிர;முனையில் அமரனின் மனைவி காஞ்சனா கதறிக்கொண்டே,
“அண்ணே..அவரு இறந்துட்டார்ண்ணேசாப்பிட்டுட்டு உட்க்கார்ந்தவா;, அப்படியே சாஞ்சிட்டார்ண்ணே எனக்கு ஒன்னுமே புரியலசீக்கிரம் வாங்கண்ணே..” என்றாள்.
அதிர்ச்சித் தாக்கி அப்படியே விழுந்த என் காதுகளில், ‘‘நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை.” அமரனின் குரல் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது.
//‘‘நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை.”//
மிகவும் பொருத்தமாகத் தலைப்பிடப்பட்ட கதை.
கதாசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.
மன உணர்வைத் தாங்கி வந்த கதை. கல்யாணத்துக்கு அடுத்து குழந்தை என்பது போல் அறுபதைத் தொட்டாலே அடுத்தது எப்படி எனும் எண்ணம் அந்த வயதாருக்கு
வந்துவிடுவது இயல்பு. கடைசி பாராவில் ஒரு திருப்பம் வைத்தது கதாசிரியருக்கு ஒரு வெற்றி.
வாழ்வின் விடுவிக்க இயலா புதிர்களுள் தலையாயது மரணம். இதை அருமையாகச் சொல்கிறது கதை. கதையின் தலைப்பு வெகு பொருத்தம். வாழ்த்துக்கள், மனம் நிறைந்த பாராட்டுதல்கள்!!.