பெருவை பார்த்தசாரதி

 DSC04625DSC04600DSC04602

“பவித்ரம்” என்பதற்கு புனிதமான, சுத்தமான, உண்மையான என்கிற பல அர்த்தங்கள் உண்டு. சென்னையில் இயங்கி வரும் “பவித்ரம்” என்கிற தொண்டு நிறுவனமும் பல புனிதமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராக திரு பேராசிரியர் கே.ஜி. ரகுநாதன் அவர்களும், பொதுச்செயலாளராக திரு ஆர். பாபுசேனன் அவர்களும், பொருளாளராக திருமதி ஜாய்ஸ் திலகம் அவர்களும், தங்களை முழுவதும் சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழி நடத்திக்கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனில் அக்கரை கொண்ட நிறுவனம் என்பது பவித்ரத்தின் மற்றொரு சிறப்பு.

பத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வரவேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக, மூன்று தமிழ் மாவட்டங்களில் “விவசாயிகளின் இன்றய நிலை” குறித்த கருத்தரங்கம்  ஒன்றை நடத்திச் சிறப்பித்தது. ஞாயிறு காலை, மைலாப்பூரில் அமைந்திருக்கும் கோகலே ஹாலில், இரண்டாவது நிகழ்ச்சியாக சிறந்த புத்தகங்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தத்துவம், ஆன்மீகம், அறிவியல், சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி படைப்பாளிகளை கெளரவித்தார்கள்.

“ராமமூர்த்தி அறக்கட்டளை” சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.  இந்நிறுவனத்தின் அறக்காப்பாளராக திரு ஹரிஹரசுப்ரமணியம் அவர்கள் பதவி வகிக்கிறார்.  அவருடைய நண்பரின் நினைவாக, விருப்பமாக நண்பர் சேர்த்து வைத்துள்ள பணத்தை நல்ல முறையில் மிகச்சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்கிற மேலான எண்ணத்தில் தத்துவம், ஆன்மீகம் மற்றும் அற்வியல் நூல்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

அடுத்து எழுத்தாளர், மொழிபெயர்பாளர் ‘காசிஸ்ரீஸ்ரீ” அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக சிறந்த மொழிமாற்ற நூல்களுக்கும், குறுநாவல்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

அறிவியல் நோக்கில் வேதங்களை ஆய்வு செய்து, ஆக்கப் பூர்வமான அறிவியல் சிந்தனைக் களத்தின் துவக்கம் பாரதம் என்கிற நோக்கில் “வேதம் கண்ட விஞ்ஞானம்” என்கிற நூலை எழுதிய திரு பி. முத்துக்குமாரசுவாமி, திரு ஜே. வீரநாதன் எழுதிய “எம்எஸ் ஆபீஸ்”, திரு ஆர் சிவராமன் எழுதிய “எண்ணங்களின் எண்ணங்கள்”, திரு ரகுவீர பட்டாச்சார்யர் அவர்கள் எழுதிய “பாதுகா சகஸ்ரம்” என்கிற நூல், காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எழுதிய “கம்ப்யூட்டரில் தமிழ்” என்கிற நூல், மிகச்சிறப்பாக மொழி பெயர்ப்பு நூல்களை எழுதிவரும்  திரு சாருகேசி அவர்களுக்கு ‘மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ என்கிற பட்டமும்,  சிறந்த குறுநாவலுக்கான பரிசாக “கருவேலங்காட்டுக் கதை” என்ற குறுநாவலை எழுதிய சினிமா இயக்குனர் திரு ராஜா செல்லப்பா, இவர்கள் அனைவருக்கும் பவித்ரம் சார்பாக பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப் பட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவிலே, முக்கியமாக குறிப்பிட வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்லாமல், இணையதளத்திலே இடம்பெறுகின்ற சிறப்பான கட்டுரைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அதற்கும் பவித்ரம் சார்பாக சான்றிதழும், பரிசும் வழங்கியது. வல்லமை மின் இதழில் வெளியான ‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்ற என்னுடைய தொடர்கட்டுரைக்கு பரிசும்  சான்றிதழும் வழங்கப்பட்டது, வல்லமைக்கு மேலும் ஒரு சிறப்பு என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பவித்ரம் தொண்டு நிறுவனம் நடத்திய பரிசளிப்பு விழாவை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர்கள்:: திரு கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் (கலைமகள் ஆசிரியர்), திரு முத்துக்குமார் (டிரினிட்டி – ஆசிரியர்), திரு எஸ்.எஸ். ராஜ்குமார் (புரவலர் – பவித்ரம்), திரு டான்ஸ்ரீ குமரன் (முன்னாள் மலேசிய மந்திரி), திருமதி ஜாய்ஸ் திலகம் (மருத்துவ அதிகாரி – தமிழ்நாடு மெடிக்கல் மன்றம், மற்றும் சென்னை மாநகராட்சி, திரு ஹரிஹரசுப்ரமணியம் (டிரஸ்டி – ராமமூர்த்தி அறக்கட்டளை, துணைத் தலைவர்-இண்டியா சிமெண்ட்ஸ்)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

15 thoughts on ““பவித்ரம்”

  1. it is heartrending to learn that you have awarded a certificate from “pavithram” for the articles on “nal vazhvu vaazha vazhikattigal” .   on this occasion i congratulate and wish that your forthcoming articles will stand testimony of your tender heart, which always do not find differences in anyone and accept person a unique creation of nature with all plus and minuses.   Vaszvu peruha vaazhtum anbu ullam.

  2. ‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்’ ஒரு நல்ல கட்டுரைத்தொடர்.
    பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன் 
    ….. தேமொழி 

  3. தங்களின் மின்னஞ்சல் செய்தி கண்டேன்.  இன்பம் கொண்டேன்.  பல நூறு நாட்கள் செய்த பணிக்கு கிடைத்த உரிய கெளரவம், அதற்கான அங்கீகாரம் இவையெல்லாம் – தூய பணிக்கு நிச்சயம் கிடைக்கும்!  சிலநேரங்களில் அதற்கான காலம் தாமதப்படலாமே தவிர.. தவிர்க்கப்படுவதில்லை! 

    வாழ்கின்ற வாழ்க்கையின் வழக்கமான ஓட்டத்திற்கே ஈடுகொடுத்து ஓட முடியாதவர்கள் நிறைந்த மக்கள் கூட்டத்தில் .. நமக்கான தளங்களைத் தேர்ந்தெடுத்து.. அதற்கான நாளும் உழைத்து உருவாக்கம் தருகின்றபோதும்.. அவை மக்களைச் சென்று அடைந்திடும்போதும் நாம் பெறும் இன்பம் கொஞ்சமல்ல!! 

    சமுதாய அளவில் அதற்கான அங்கீகாரம் என்னும்போது – சான்றிதழ் பெறுவது போன்றது!  பொதுவாக.. நம்மைப்போல் படைப்பாளர்களிடம் கேட்கப்படும் கேள்வி என்ன தெரியுமா?  இதனால் என்ன கிடைக்கிறது?  குறிப்பாக பொருளாதார ரீதியில் வருவாய் உண்டா? என்பார்கள்.. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது.. படைப்பாளன் அதற்கான பணம்நோக்கிய பயணம் தொடங்கிவிட்டால் அந்த எழுத்துக்களில் உண்மை இருப்பதில்லை.  குறிப்பாக.. எழுத்தாளன் தான் எடுத்துக்கொள்ளும் கருவில் தான் குறியாக இருக்க வேண்டும்தவிர.. காசில் அல்ல!!

    அன்றாடம் நமக்கிருக்கும் அலுவல் பணிகள், இல்லம் தொடர்பான வேலைகள்.. குழந்தைகள் பற்றிய நமது நேரப் பங்கீடு என சொந்த பந்தங்கள் முதலாக நண்பர்கள் வரை.. நாமும் சராசரி மனிதர்களாய் வாழ்ந்து கொண்டு.. அதையும் தாண்டி இதயத்தில் ஏந்தியிருக்கும் இலட்சிய நெருப்பு அணைந்துவிடாமல் நாளும் பொழுதும் இயங்கிவருகிறோம் என்றால் அதுதான் முதல் சாதனை என்பேன்!

    ஓராண்டிற்கும் மேலாக தாங்கள் இணையதளம் வாயிலாக கட்டுரைகள் பதிவு செய்து அதனைப் படித்துப் பயன்பெறும் பல்வேறு வாசக நெஞ்சங்களில் இடம்பிடித்து.. ஆக்கங்களை பயனுள்ள வகையில் உங்கள் நேரங்களை செலவிட்டுவருவது இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல.. நாளைய சமுதாயத்திற்குமானது என்பதில் மறுகருத்தில்லை!

    தாங்கள் எழுதிய பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட்டால் மேலும் பல லட்சம் வாசகர்களைச் சென்றடைய வழி பிறக்கும் என்கிற கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்!

    நானும் ஏற்படுகின்ற சூழ்நிலைகளின் தாக்குதல்களையும் தாண்டி.. எழுத்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.  பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற நூல் தற்போது எழுதப்பட்டு வருகிறது.  கவியரசு கண்ணதாசன் காவியக்கவிஞர் வாலி தவிர.. பிற கவிஞர்களின் திரைப்பாடல்களைப் பற்றிய ஒரு தொகுப்பாக உருவாக்கம் பெற்று வரும் நூல் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து அதற்கான அச்சேற்றம் நடைபெறும் என்று திட்டமிட்டுவருகிறேன்.

    இணையதளங்களில் நுழைகின்ற பழக்கம் அதிகம் இல்லை என்பதாலும் .. கிடைக்கின்ற நேரத்தில் தொடர்ந்து பல்வேறு பணிகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுப்பதால்.. எனது பின்னூட்டங்கள் அமையவில்லை..

    சென்னையிலே வாழ்ந்திருந்தும்.. நமது சந்திப்புகள் இன்றுவரை சாத்தியமின்றிப் போவது ஒரு பக்கம்!  எனது வளைகுடா வாழ்க்கையும் இதிலிருந்து கிட்டுகின்ற விடுமுறை என்பது சரியாக அமையாததாலும்.. நாம் மின்னஞ்சல்வழியே மட்டும் கைகுலுக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது!

    தங்கள் சேவை தொடரட்டும்!  வாழ்த்துக்கள்!

  4. “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்னும் தங்களது படைப்புக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.

  5. வாழ்த்துரை எழுதிய திரு சச்சிதானந்தம், தேமொழி, பாலா, காவிரிமைந்தன், பாலச்சந்தர், சூரி மற்றும் மருத்துவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  6. “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்னும் தங்களது படைப்புக்கு  பரிசு கிடைத்திருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். தங்களது அருமையான படைப்புக்குக் கிடைத்த நல்லதொரு அங்கீகாரம் இது. தாங்கள் மேன்மேலும்   பரிசுகள், விருதுகள் பல பெற வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன். 

  7. படித்தேன் படித்தேன் குடித்தேன்

    உங்களின் அருமையான கட்டுரைக்கு இது ஒரு நல்ல அங்கீகாரம்

    வாழ்த்துகள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  8. பவித்ரம் பவித்ரத்திற்கு (தங்களுக்கு) பவித்ரம் (பரிசு) அளித்து கௌரவித்துள்ளது.
    மனதார வாழ்த்து தங்களுக்கும் நன்றியை பவித்ரம் அமைப்பிற்கும் சமர்ப்பிக்கிறேன்.

    பூபேஷ் குமார்.

  9. அன்புள்ள ஸ்ரீமான் பெருவை பார்த்தஸாரதி அவர்களுக்கு,
    அடியேன் வணக்கம். நான் கடந்த இரண்டு நாட்களாக திருப்பதி சென்றிருந்ததால் தங்கள் மின் அஞ்சலை இன்றுதான் பார்த்தேன். தங்கள் ’நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்’ கட்டுரைதக்கு பவித்ரம் ஸ்தாபனம் அளித்திருக்கும் அங்கீகாரம் ’வல்லமை ’வாசகர் அனைவருக்கும் பெருமை. லக்‌ஷ்மீ நாராயணன் அருளால் தங்களுக்கு பல பரிசுகளும் கெளரவங்களும் கிடைக்கப்போவது நிச்சயம்.
    பாராட்டுக்கள்!
    அன்புடன்
    ஸம்பத்

  10.  I am very much happy about your achievement. Honour for your hard work has come.Start writing novels and historical happenings in your simple way of presentation to readers and fans.You have talent.Kindly devote some more time for writing (to release a book) in future.May goddess  Saraswathi give you more strength and ideas.All the best.
    Mylai Subbu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *