கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே
உள்ளின் உள்ளே உள்ளவளாய்
உள்ளும் வெளியுமாகி நிற்கின்றாய்
பள்ளம் அனைத்தும் நீக்குகிறாய்
கள்ளம் எல்லாம் களைகின்றாய்
என்னென்பேன் எவ்விதம் சொல்வேன் நின்னெழிலை
என்னியதக் கமலமதில் என்றும் அமர்ந்தருளும்
பொன்மயமானவளே புன்னகை பூத்தவளே
எனதருமைத் தாயே நீலாயதாக்ஷியே
கண்கள் கயலொத்த காரணமோ
கண்காட்சி தந்தாய் அதிபக்தன் குளிர
பண் பாடினான் மெய்மறந்து நின் புகழை
எண்ணம் ஒன்றானானை நின்னடிக் கொண்டாயே
மலர் வாசப் பந்தல் தோரண மாலையுடன்
உலகாளும் உத்தமியே உன் பதம் போற்றி
குளமாய்க் கண்கள் ஆனந்தமுற
உளம் குளிர அலங்கார ஊஞ்சலிட்டோம்
உல்லாசம் பொங்கிட ஒய்யார எழிலுடன்
நலம் வளமாக பொன்னூஞ்சல் ஆடிடுவாய்
சீலமிகு சிங்காரி சீர் பெற ஆடிடுவாய்
வெள்ளமாய்க் கருணை பொழிந்திடுவாய்
கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே!
பக்தி ரசம் சொட்டும் அற்புதக் கவிதை. மிக அருமையானதொரு பகிர்விற்கு என் உளமார்ந்த நன்றி.
அன்னை அருளினால், எதுவும் கை கூடும். பாராட்டுக்கும் நன்றி. அதுவும் அன்னை திருவடிக்கே சமர்ப்பணம். அன்னை அருளுடன் தங்கள் அனைவருக்கும் நலம், வளம் செழிப்புற பிரார்த்தனை.. வணக்கம். ஸாய்ராம்.
Very well written by the great Fondly called Joojoo Uncle.
It is always a pleasure to see his instincts and thoughts reflecting in his poems.