காயத்ரி பாலசுப்பிரமனியன்

மேஷம்:பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சியும், பரபரப்பும் நிறைந்திரு க்கும்.மாணவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் தராதரமறிந்து அளவோடு பழகுதல் நல்லது. பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடம் கொடாமல், உங் கள் பணியில் விழிப்பாய் இருங்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் பிரயாணங்கள் மூலம் புதிய உறவுப் பாலம் உருவாகும். உங்களுக்கு நல்ல யோசனை சொல்பவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வியாபாரம், தொழிலிடங்களில் உங்களின் சொல்லுக்கு தனி மதிப்பிரு க்கும்.

ரிஷபம்: உங்கள் ,வாகனங்களை தகுந்த விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்கள் விழிப்புணர்வோடு இருந்தால், வீண் சஞ்சலங்களிலிருந்து தப்பிக்கலாம்.வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணி புரியும் இடத்தில் அவ்வப்போது எழும் கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொண்டால், நிம்மதியாக வேலை செய்ய முடியும். கலைஞர்கள் திறமை என்பதுடன் பொறுமையும் உடனிருக்குமாறு பார்த்துக் கொண்டால், எளிதில் பணிகள் முடியும்.முதியவர்கள் உணவில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்;மாணவர்கள் யோசித்து நிதானமாகச் செயல்பட்டால், எல்லா விஷயங்களும் ஏற்றமாகவே முடியும். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், பெற்றோரின் பெருமை உயரும். கர்ப்பிணிப் பெண்கள் அதிக அலைச்சல்,அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். வியாபாரிகள் கணக்கு வழக்குக்களில் நேர்மையான போக்கைக் கையாள்வது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் தர்க்கங்கள் எழாதவாறு பேசி வந்தால்,மனதில் அமைதி நிலவும்.அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு தகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பார்கள்.

கடகம்: மாணவர்கள் படிப்பில் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அதிக மதிப்பெண் பெறுவது உறுதி. சேமிக்கும் வகையில் பண வரவு தாராளமாய் இருக்கும். உறவினர் இடையே சிறு பிரச்னைகள் எழக்கூடும். எனவே சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது. சிலர் குடும்பத்தோடு இனிய சுற்றுலா சென்று வருவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து விடும். பணியில் இருப்பவர்கள் விலைஉயர்ந்த பொருள்களை கையாளுவதில் கவனம் தேவை. பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது.

சிம்மம்: இந்த வாரம் நண்பர்களிடையே வேண்டாத விஷயங்களுக்காக சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது விவேகத்தைக் கடைபிடித்து வந்தால், பயணங்கள் இனிமை யாய் இருக்கும் . பெண்கள் ,பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களும் கட்டுக்குள் இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் சீற்றத்தித்திலிருந்து தப்பிக்க இயலும். வியாபாரிகள் பங்குதாரரின் எண்ண ஓட்டங் களை அறிந்து கொண்டு செயல்பட்டால், லாபம் குறையாது. கலைஞர்கள் ,நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .

கன்னி: வீடு, நிலம் வாங்குகையில், பத்திரத்தை சரிபார்த்த பின் பணத்தைக் கட்டுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்தால், இல்லறம் நல்லறமாகத் திகழும். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது புத்திசாலித் தனம்.மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறர் மனம் புண்படாமல் பேசுவதை மேற்கொண்டால், அதிக நன்மை பெறலாம்.பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பக்குவமாக நடப்பது அவசியம்.

துலாம்: பெண்கள் உறவுகளிடம் இன்முகம் காட்டினால், அவர்களின் அன்பும் குறையாமலிருக்கும். மாணவர்கள் கவனத்தை திசை திருப்பும் இடங் களுக்கு போவதைத் தவிர்த்து விடவும். வியாபாரிகள் சமயோசிதமாக செயல்பட்டால், எதனையும் சாதிக்க முடியும் . பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோபமே பல சமயம் உங்களுக்கு வர வேண்டிய நன்மை க்குத் தடை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து விட்டால், அவசியமான செயல்கள் நல்ல முறையில் நடைபெறும். பொறுப்பில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் உங்கள் கோப தாபங்களை பிரதிபலிக்க வேண்டாம்.

விருச்சிகம்: பெண்கள் நிதிநிலைமைக்கேற்றவாறு செலவுகளை மேற்கொண்டால், கடன் தொல்லை இராது. அனுசரித்து நடந்து கொண்டால், கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படாமல் இருக்கும்.வியாபாரிகள் இந்த வாரம் வாகன பயணங்கள் மற்றும் பராமரிப்பிற்கென கணிசமாக பணம் செலவு செய்யும் நிலை இருக்கும்.முதியவர்களின் உடல் நலம் சீராக இருப்பதால், உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும். உறவுகள் மற்றும் நண்பர்களோடு செலவு செய்யும் நேரம் இனிமையாகவும், மனதுக்கு இதமாகவும் அமையும்.

தனுசு: கலைஞர்கள் தொல்லை தந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நலம். . நம்பிக்கையுடன் செயல்படும் குணத்தால்மாணவர்கள் , தொட்ட காரியம் யாவிலும் எளிதான் வெற்றி கிடைக்கும். பெண்கள் பக்குவமாக நடந்து கொண்டால், குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தானே நீங்கும். அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தை பிறர் தவறாகப் பயன்படு த்த அனுமதிக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எளிமையாய் இருத்தல், இனிமை யாய் பேசுதல் இரண்டையும் கடை பிடித்தால், அனைவரும் உங்கள் பக்கமே இருப்பார்கள்.

மகரம்: உங்கள் வரவு செலவுகள் கட்டு க்குள் இருந்தால், பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இடமிராது. கலைஞர்கள் வாழ்க்கையில் உயர, வரும் வாய்ப்பு நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில், கூட்டு முயற்சி முலம் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதிக லாபம் பெறலாம். கல்வியில் மேற்படிப்பு க்கான வாய்ப்புகளுக்கு மாணவர்கள் எதிர்பார்த்த வங்கி உதவி கிட்டும். வேலைக்குப் போகும் பெண்கள் இல்ல வேலை , அலுவலக பொறுப்பு இரண்டும் மோதாமல் பார்த்துக் கொண்டால், மன அமைதி குலையாமலிருக்கும்.

கும்பம்: பெண்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விடலாம். மாணவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் காட்ட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத ,செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் விரைந்து முடியும். வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக்கால் வைப்பதை தவிர்த்தால், செலவுப் பட்டியல் குறையும். கலைஞர்களின் வாழ்க்கை வளம் பெற்று விளங்க, உடன் இருப்பவர்களிடம் இதமாக நடந்து கொள்ளுங்கள்.

மீனம்: இந்த வாரம் வியாபாரிகள் பயணங்களில் கவனமாக இருந்தால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம். சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடை பிடிப்பது அவசியம். பெற்றோர்கள் பிள்ளைக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். உற்சாகம் குறையாமலிருக்கமுதியவர்கள் உணவு , உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது பணியிடங்களில் கவனமாக நடந்து கொண்டால், சிறு பிரச்னைகளால் சிந்தனை சிதறாமலிருக்கும். தொந்தரவுகள் புதிதாக முளைக்காமலிருக்க, பொது வாழ்வில் உள்ளவர்கள் இடம், பொருள் ஏவலறிந்து நடந்து கொள்வது நல்லது.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார ராசிபலன்!

  1. வல்லமையில் தனது 100 வது பதிவை வெளியிட்ட ஜோதிடர் காயத்ரி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    …..தேமொழி 

  2. ‘வல்லமை’யில்
    வல்லமையாய் சதமடித்ததற்கு
    வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *