மலேசிய இந்து சங்கம் 2013 ஆண்டுக்கான சங்கரத்தினா மறவன்புலவு க. சச்சிதானந்தன்

3

மலேசியாவில் இந்துத் தொண்டுக்கான உயர்விருது. மலேசிய இந்து சங்கம் வழங்கிய விருது – சங்கரத்தினா விருது

mhs08130913

15.09.2013 மதியம், கோலாம்பூர் பெற்றாலிங்கு செயா குடிமக்கள் மண்டபம் மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சண் வழங்குகிறார். உடனிருப்பவர் மலேசிய இந்து சங்கத் துணைத் தலைவர் கந்தசாமி. நிகழச்சி முதலாவது உலகத் திருமுறை மாநாடு 36ஆவது திருமுறை விழா

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தம் வாழ்நாள் முழுவதையுமே இறைப்பணிக்காகவும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நல்ல எண்ணத்தோடு துயருற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி உன்னத வாழ்க்கை வாழ்பவர் ஐயா திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். இவ்வரிய விருதினை ஐயாவிற்கு வழங்கும் விதமாக இவ்விருது பெருமை கொள்கிறது. வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஐயாவின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, அவர் பெற்ற விருதுகள் பற்றி அறிய:

1941 திசம்பர் 5இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தந்தையார் நல்லாசிரியர், சைவசிகாமணி முருகேசு கணபதிப்பிள்ளை, சைவ சமய நூல்களை 30 ஆண்டுகளாகப் பதிப்பித்து வந்தவர். தாயார் தங்கம்மா. மனைவி இராசேசுவரி, மக்கள் கயல்விழி, சிவகாமி, முருகவேள், பிஞ்ஞகன்.

கல்வி

1945 மறவன்புலவு சகலகலா வித்தியாசாலை,

1949 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,

1959 சென்னை பச்சையப்பன் கல்லூரி,

1969 யப்பான் தோக்காய் சுவிசங்கு கேங்கிசோ ஆய்வகம்,

1973 சிங்கப்பூர் நன்யாங்கு பல்கலைக்கழகம்,

1976 இங்கிலாந்து சதாம்பரன் பல்கலைக்கழகம்

1988 சென்னைப் பல்கலைக்கழகம்.

விருதுகள்

1963 இலங்கை அறிவியல் வளர்ச்சிச் சங்கப் புலமைப் பரிசில் விருது.

1964 இந்திய அரசின் புலமைப் பரிசில் விருது.

1969 யப்பானிய அரசின் புலமைப் பரிசில் விருது.

1973 யூனெஸ்கோவின் புலமைப் பரிசில் விருது.

1976 பிரித்தானிய கழகத்தின் சதாம்பரன் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் விருது.

1976 ஆத்திரேலிய அறிவியல் கழகத்தின் வங்காள தேச வளர்ச்சிப் பயணத்துக்கானன புலமைப் பரிசில் விருது.

1986 சீசெல்சு இந்துக் கோவில் சங்கப் பாராட்டு விருது.

1987 சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கம், பாவேந்தர் பாரதிதாசன் விருது.

1995 சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளர் விருது.

2000 திருவாவடுதுறை ஆதீனம் சிவநெறித்தொண்டர் விருது.

2008 அறவாணன் அறக்கட்டளை சாதனையாளர் விருது.

2010 சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு விழாவில் பாராட்டு.

2012 கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முதுமுனைவர் பட்டம்.

2013 காரைக்குடிக் கம்பன் கழகத்தார், தமிழ்த் தாய்க் கோயிலில் பரிவட்டப் பாராட்டும் முடிசூடல் விருதும்.

தொழில்

1963 கொழும்பு இறக்குதிக் கட்டுப்பாட்டுத் திணைக்கள உதவியாளர்,

1966 யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளர்,

1966 கொழும்பு உள்ளூராட்சி அமைச்சரின் தனிச் செயலர்,

1967 கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலைய அறிவியல் ஆய்வாளர்,

1977 யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்,

1977 யாழ்ப்பாணப் பல்கைலக்கழகப் பேராசிரியர்,

1979 ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக 23 அரசுகளுக்கு ஆலோசகர்,

1986 சென்னை காந்தளகம் பதிப்பாளர்,

1999 மின்னம்பலத்தில் கலைமாமணி பா. சசிரேகா மேற்பார்வையில் உலகெங்கும் 62 நாடுகளில் தமிழ்நூல் www.tamilnool.com விற்பனையாளர்,

2000 சத்தியமங்கலம், தாம்பரம், இராமநாதபுரம், நாகர்கோயில், சிதம்பரம், சேலம் காந்தளம் புத்தக விற்பனை நிலையங்களின் அமைப்பாளர்,

2013 யாழ்ப்பாணம் காந்தளகம் மீளமைத்துப் பதிப்பாளர்.

சைவ சமயப் பணி

1950 ஆறுமுக நாவலர் விழா, திருமுறைப் போட்டியிலும், பேச்சுப் போட்டியிலும் பங்கேற்றவர்.

1954, 1955, 1956 தவத்திரு யோகர் சுவாமியின் நேரடி வழிகாட்டலில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் புராண படனர்.

1959 சென்னையில் சைவப் பேரறிஞர், பேரா. அ. ச. ஞானசம்பந்தன் வழிகாட்டலில், பாதுகாப்பில் வாழத் தொடங்கியவர்.

1962 சென்னை சைவசித்தாந்தப் பெருமன்ற இளஞ் சைவப் புலவர் மாணவர்.

1963 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருக்குள மீளமைப்பாளர்.

1965 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானத்திடம் திருமுறைத் தொடக்கப் பதிப்புகள் பெற்றவர், பயின்றவர்.

1966 யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் திருக்கோயில் – திருத்தேர் மீளமைப்பாளர்.

1968 கொழும்பு இந்து வாலிபர் சங்கத் துணைச் செயலாளர்.

1969 மார்கழியில் சுங்கைப் பட்டாணியில் டத்தோ வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற மலேசிய இந்து இளைஞர் பேரவை மாநாட்டில் பங்கேற்றவர்.

1971 சிங்கப்பூரில் திரு. ஈ. வி. சிங்கனுடன் இணைந்து ஞாயிறு திருக்குறள் வகுப்புகளில் ஆசிரியர்.

1971 பிஜித்தீவில் தென் இந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கம் மற்றும் இலவுற்றோக்கா, விவேகானந்தர் பாடசாலையில் திருமுறை ஆசிரியர்.

1971 சாவகத்துக்கு அருகே, பாலித்தீவுச் சிவன் கோயில்களில் வழிபாடு, சாவகத்தில் சொக்சகார்த்தாவில் பெரும்பாணண் சிவன்கோயிலில் வழிபாடு.

1971 இலங்கை இந்து இளைஞர் பேரவை அமைப்பாளர், 60 அமைப்புகளின் கூட்டமைப்பின் தொடக்கத் தலைமைச் செயலாளர் 1977 வரை. ஆண்டு தோறும் கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, இலுப்பைக்கடவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இந்து இளைஞர் மாநாடுகள் நடத்தியவர்.

1973 இலங்கை இந்து இளைஞர் பேரவை தலைமைச் செயலாளராகத் தீவு முழுவதும் இந்து இளைஞர் கொடிநாள் 1975இல் நடத்தத் தொடங்கி 1977 வரை நடத்தி வந்தவர்.

1973 மதுரையில் நடைபெற்ற சைவ மாநாட்டிற்கு இலங்கை இந்து இளைஞர் பேரவை சார்பில் இலுப்பைக்கடவை, திரு. கணேசமூர்த்தி பேராளராகச் செல்ல வழிவகுத்தவர்.

1974 யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்திய அமைப்புக் குழுத் துணைச் செயலாளர்.

1975 இப்பைக்கடவை இந்து இளைஞர் மன்ற உறுப்பினர் இளைஞர் பணிப் பயிற்சிக்காகக் கனடாவுக்கும் கொழும்பு இந்து வாலிபர் சங்க உறுப்பினர் யப்பானுக்கும் செல்ல ஏற்பாடு செய்தவர்.

1976 மலேசிய, மொரிசியசு, பிஜி நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்ட உலக இந்து இளைஞர் மாநாட்டைக் கொழும்பில் நடத்தியவர். டத்தோ வைத்தியலிங்கம் மலேசியவில் இருந்து வந்திருந்த பேராளர்.

1977 விசுவ இந்து பரிசத்தின் காசி மாநாட்டுக்கு இலங்கை இந்து இளைஞர் பேரவைப் பேராளர்களை அனுப்பியவர்.

1979 யாழ்ப்பாணம், கைதடி, பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழாவில் அனைவரும் வடம் பிடிக்க முடியாத நிலையில், அவர் தலைமையில் அறவழிப் போராட்டம், தேர்த்திருவிழா நிறுத்தம், பின் அனைவரும் கோயிலில் அனைத்து நிலைகளிலும் வழிபடும் உரிமை.

1980 மொரிசியசு தமிழ்க்கோயில் கூட்டமைப்புக்கு ஆலோசகர், கருத்துரை வழங்கி வந்தவர்.

1984 சீசெல்சு இந்துக் கோயில் சங்க நிறுவனர். 200 ஆண்டுகாலமாகச் சீசெல்சில் வாழும் தமிழருக்கான முதலாவது கோயில் அமைக்கக் கால்கோளிட்டதால் பிள்ளையார் நகர் நடுவே அருள் இன்றும் பாலிக்கிறார்.

1985 சீசெல்சு இந்துக்களுக்குத் தைப் பொங்கல், தீபாவளி நாள்கள் பகுதி விடுப்புகளாகச் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் வழியாக அரசிடம் ஆணை பெற்றவர்.

1988 முருகன் பாடல்கள் நூல், 12 பகுதிகள் 4,800 பக்கங்கள் கொண்ட தொகுதியைக் கொழும்பு தெட்சணத்தார் வேளாளர் மகமைக்காகத் தயாரித்தவர்.

1989 சிதம்பரம் ஆருமுகநாவலர் அற்க்கட்டளைக் குழுவில் யாழ்பாணம் சைவபரிபாலன சபையின் சார்பில் இரு ஆண்டுகள் உருப்புரிமை.

1994 மலேசிய சைவநெறித் திருக்கூட்டத்தினருக்காகச் சிவருமோத்திரம் நூலைப் பதிப்பித்தவர்.

1994 மலேசிய சைவ நெறித் திருக்கூட்டம், மலேசியச் சைவப் பெரியார்கள் தான்சிறீ சோமசுந்தரம், ஆறுமுகம், குலவீரசிங்கம் ஆகியோர் ஆதரவுடன் பெரியபுராணம் மூலமும் ஆறுமுகநாவலர் மற்றும் ஏழாலை மு. கந்தையா எழுதிய சூசனங்களைப் பதிப்பித்தவர். கோலாலம்பூர் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்.

1996 தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானத்தின் ஆசியுடன் மலேசியச் சைவப் பெரியார்கள் ஆறுமுகம், குலவீரசிங்கம் வழிகாட்டலில், தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறைப் பதிப்பு மீண்டும் வெளிவரப் பணிபுரிந்தவர். 12 திருமுறைகள் 16 பகுதிகளாக வெளிவரும் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர். செம்பதிப்பாக, 18,600 பக்கங்கள் கொண்ட அப்பதிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்.

1997 இலங்கையில் இந்துக் கோயில்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகத் தமிழகத்தில் அரசியலாருடன் தொடர்புகொண்ட முயற்சிகளால் சென்னைச் சிறையில் ஒருமாதம் இருந்தவர்.

2003 திருக்கயிலாயப் புனிதப் பயணம் மேற்கொண்டவர். ஆவணி நான்காம்பிறை நாளில் திருக்கயிலாயக் காட்சி பெற்றவர்.

2005 மின்னம்பலத்தில் தருமபுரம் ஆதீனம் பன்னிரு திருமுறை முழுவதையும் www.thevaaram.org தளத்தில் ஏற்றி உலகெங்கும் 72 நாடுகளில் 720 நகரங்களில் நாள்தொறும் சராசரியாக 20,000 தட்டித் திறப்பாளர் பார்த்துப் பயனுறச் செய்தவர்.

2007 திருமலை திருப்பதி தேவத்தானத்தின் பன்னிரு திருமுறைத் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கான ரூ. 13 இலட்சம் நிதி ஒதுக்கீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்.

2009 பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களில் 10,585 பாடல்களைத் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையாகப் பாடி முடித்திருக்க, குரலிசையாகப் பாடி முடிக்காத எஞ்சிய பாடல்களைப் பதிவுசெய்யச் சிங்கப்பூர்த் திருமுறை அன்பர்களின் நிதி உதவியுடன் பொற்றாளம் துரை. ஆறுமுகம் மேற்பார்வையில் ஓதுவார் பா.சற்குருநாதன் பாடி முடிக்கும் திட்டத்தை ஒருங்கிணைப்பவர்.

2010 பன்னிரு திருமுறையின் மியன்மார், சிங்களம், மலையாளம், கன்னடம், வடமொழி, இந்தி மொழிபெயர்ப்புகள் வெளிவருவதற்காக 25 மொழிபெய ர்ப்பாளரின் பணிகளை ஒருங்கிணைப்பவர். மலாய் மொழிபெயர்ப்பு வெளிவர ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுபவர்.

2011 பன்னிரு திருமுறையில் உள்ள தமிழ் ஒலிகளை ஞால மொழியொலி நெடுங்கணக்குடன் இயைந்து ஒப்பு நோக்கிய மொழியியலாளர் பேரா. புனல் க. முருகையன் முயற்சியை நூலாக்கி, கணிணி மொழியியலாளர் பேரா. வினோதராசன் வழியாகப் பன்னிரு திருமுறையின் 18,268 பாடல்களையும் 20 மொழியாளர் ஒலிபெயர்ப்பாகப் பயிலுமாறு ஒருங்கிணைப்பவர்.

2011 தாய்லாந்து அரச குருவான தவத்திரு வாமதேவ முனிவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தாய்லாந்து அரசரின் திருக்கோயிலில் மார்கழி 30 நாள்களும் திருவெம்பாவைப் பாடல்களைச் செம்மையாக ஓத உதவியாக, கிரந்தம், சீயம் ஆகிய வரிவடிவங்களில் நூலாக்கிக் கொடுத்தவர்.

2011 மியன்மாரில் மாநிலங்கள் தோறும் தேவாரம் மின்னம்பலத் தளப் பரப்புரையாளர். மியம்மா மொழிக்குத் திருமுறை மொழிபெயர்ப்புக்குத் தளம் அமைத்தவர். மியம்மா மொழிபெயர்பாகத் திருவெம்பாவை நூல் வெளியீட்டை ஒருங்கிணைத்தவர்.

2011 கம்போடியாவில் காரைக்காலம்மையார் சிலைகள் தாங்கிய கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர், கம்போடியாவின் 1008 சிவலிங்கத் திருமேனிகளின் கோயில்கள் சென்று காணொலிகளாக்கியவர்.

2011 சிங்கப்பூர் செண்பகப் பிள்ளையார் கோயிலாரின் திருமுறை வகுப்பு மாணவர்களுக்காக நூல்கள், சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு அமைப்பாளரின் மாநாடுகளுக்காக நூல்கள் தயாரித்தவர்.

2012 ஆத்திரேலியாவின் மாநிலத் தலைநகர் தோறும் சென்று தேவாரம் மின்னம்பல தளம் பரப்புரைத்தவர்.

2012 ஆறுமுகநாவலர் தயாரித்த 71 நூல்களையும் மின்னம்பலம் வழி எவரும் படிக்குமாறான செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர். இத்திட்ட முன்னோடி ஆத்திரேலியா மெல்போர்ண் வாழ் பொறியியலாளர் திரு. சிறீஸ்கந்தராசா.

2012 சிலாங்கூர், பெராக், பினாங்கு, கெடா, மலாக்கா, சரவாக்கு, சபா மாநிலங்களிலும் கோலாம்பூர் மற்றும் இலபுவான் நகரங்களிலும் மலேசிய இந்து சங்கத்தின் கிளைகள் தோறும் சென்று தங்கி, திருமுறை வளர்ச்சிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர்.

mhs11130913mhs10130913

2013 ஓராயிரம் ஆண்டுகளாக மறவன்புலவில் தம் முன்னோர் அறங்காத்துத் தொண்டாற்றி வரும் திருக்கோயில் இலங்கையின் 30 ஆண்டுகாலப் போரினால் சிதைந்து போக, புதுப்பித்து மீளமைக்கும் திருப்பணியாளர்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மலேசிய இந்து சங்கம் 2013 ஆண்டுக்கான சங்கரத்தினா மறவன்புலவு க. சச்சிதானந்தன்

  1. அறுபத்து மூவர் செய்த அரும் பணிகளையும் 
    ஐயா ஒருவரே செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்தம் புண்ணிய வாழ்வில்.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  2. ஐயா அவர்களின் அயராத உழைப்பும், தணியாத தமிழார்வமும், ஓய்வில்லாத சமூகப் பணியும், அதற்காக அவர் பெற்றுள்ள விருதுகளின் பட்டியலையும் படிக்கும் பொழுது மலைப்பாக உள்ளது. என் பணிவான வணக்கங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *