செண்பக ஜெகதீசன்

 

 

 மதிப்பு…

 

உலோகத்தை உருக்கி

உருக்கொடுத்து சிலையாய்,

மனிதன்

உயர்த்திவிடுகிறான் மதிப்பை-

வணங்கும் தெய்வமாக..

 

மதிப்பு

விலைமதிப்பாகும்போது,

வெளியேற்றப்படுகிறார் கடவுள்

கடத்தல் பொருளாக..

 

படைத்தவனைப் படைத்தவனே

கடத்துகிறான்

கிடைக்கும் காசைக்

கடவுளாய் எண்ணி..

 

இப்போது சிரிக்கிறான்

இறைவன்,

இவனைப் பார்த்து…!

 

       

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *