மதிப்பு!…
செண்பக ஜெகதீசன்
மதிப்பு…
உலோகத்தை உருக்கி
உருக்கொடுத்து சிலையாய்,
மனிதன்
உயர்த்திவிடுகிறான் மதிப்பை-
வணங்கும் தெய்வமாக..
மதிப்பு
விலைமதிப்பாகும்போது,
வெளியேற்றப்படுகிறார் கடவுள்
கடத்தல் பொருளாக..
படைத்தவனைப் படைத்தவனே
கடத்துகிறான்
கிடைக்கும் காசைக்
கடவுளாய் எண்ணி..
இப்போது சிரிக்கிறான்
இறைவன்,
இவனைப் பார்த்து…!