இரத்தினக் கம்பளம்
பி. தமிழ்முகில் நீலமேகம்
உன் பிஞ்சுப் பாதம்
மண்ணில் பதிய
பூமித் தாயும் அகமகிழ்ந்து
உளம் பூரித்து – ஆனந்தம் வழிய
புன்னகையுடன் உனக்கு
இரத்தினக் கம்பளம் விரித்து
வரவேற்பளிக்கிறாளோ ??
கள்ளமறியா கிள்ளையே !!!
அவளை எந்நாளும் காத்திட
உறுதிகொண்டால் – எந்நாளும்
நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!!
நல்வாழ்வு வாழ மண் – மழை காக்க
மனதில் உறுதி கொள்வோமே !!!
இரத்தினக் கம்பளத்தின் எழிலினை
இரசித்து மகிழ்வோமே !!!