பி. தமிழ்முகில் நீலமேகம்

 

உன் பிஞ்சுப் பாதம்

மண்ணில் பதிய

பூமித் தாயும் அகமகிழ்ந்து

உளம் பூரித்து – ஆனந்தம் வழிய

புன்னகையுடன்  உனக்கு

இரத்தினக் கம்பளம் விரித்து

வரவேற்பளிக்கிறாளோ ??

கள்ளமறியா கிள்ளையே !!!

அவளை  எந்நாளும் காத்திட

உறுதிகொண்டால் – எந்நாளும்

நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!!

நல்வாழ்வு வாழ மண் – மழை காக்க

மனதில்  உறுதி கொள்வோமே !!!

இரத்தினக் கம்பளத்தின் எழிலினை

இரசித்து மகிழ்வோமே !!!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *