இன்னம்பூரான்

kunukku

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பத்து நாட்களுக்கு முன்னால் 30 10 2013 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் சமர்ப்பிவிக்கப் பட்ட ஆடிட் ரிப்போர்ட்டிலிருந்து ஒரு சோறு. அந்த கூத்தைக்கேளுமையா. 1400 ஊழியர்களின் மாதாந்திர சேமிப்பை கஜானாவில் கட்டி விடவேண்டும், அத்துடன் கார்ப்பரேஷன் பங்கையும் கட்டி விடவேண்டும் என்று 2003லேயே வந்த அரசாணையை திரஸ்கரித்தது,திருச்சி கார்ப்பெரேஷன் என்று ஆடிட் குற்றம் சாட்டியது, அந்த ரிப்போர்ட்டில். பத்து வருடமா இதற்கு என்று கேட்டு விடாதீர்கள். அந்த சேமிப்பை விதி மீறி வங்கிகளில் தங்க வைப்பதிலும் மாதக்கணக்காக தாமதம். முனிசிபல் கார்ப்பரேஷன் இதனால் விளைவித்த நஷ்டம் ரூபாய் 33.40 லக்ஷம். இது எந்த தெய்வத்துக்கு ப்ரீதி? என்ன தான் பதில் சொல்றாக என்று பார்த்தால்:

ஆடிட் கிட்ட சொன்னது: எதிர்பாராத தாமதம் என்ற சால்ஜாப்பு.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம்: ஆடிட்காரன் சொன்னது பழங்கதை; விதிப்படி செய்து விட்டோமே 2013ல். ஞொய்ங்!

( 2003லிருந்து தாமதமேனோ? -மவுனம்.)

சில ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதான் தாமதம். (என்ன ஆவணமோ? ஆடிட் ரிப்போர்ட்படி அந்த சால்ஜாப்பு சொல்லவே இல்லையே.)

எனக்கு என்னமோ தோன்றுவது இது தான்: என்னப்பா குப்பற விழுந்துட்டாயே. காயம் பட்டதா?

ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு பதில்: விழுந்தேனா? நல்லாருக்கு போ! இது புருடா வித்தை.

Image Credit: http://2.bp.blogspot.com/-crEqfwq7Tac/TngFR_bxj8I/AAAAAAAAEZE/G3Cm5UjEPHQ/s320/kunukku.JPG

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *