சதுரங்கச் சாம்பியன்
தமிழ் பரதன்
விஸ்வநாதன் ஆனந்தாய் இருந்து
செஸ்வநாதன் ஆனந்தாய் மாறிய – காலம் அது.
நார்வே நாட்டின் நாயகனோடு
தாய் நாட்டின் மடியில் தலை வைத்துப் போட்டி.
அறுபத்து நான்கு கட்டங்களில்
அசத்தப் போவது யார்?
பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில்
நனையப் போவது யார்?
பத்து சுற்றுகளுக்குள் பதில்,
தெரிந்து விட்டது -அடுத்த
சதுரங்க சாம்பியன் யாரென்று?
வந்தாரை வாழவைக்கும்
தமிழகத்தில் கார்ல்ஸன்
மட்டும் விதி விலக்கா?
வயதுக்கு வந்தனம் செய்தாலும்
அதிகம் திறமைக்கு
தானே கிட்டியது பரிசு.
ஐந்து சாம்பியன் பட்டம்
வென்றாலும் இன்று ஆனந்துக்கு
துணையாய் இருப்பது
வரலாறு தானே.
வரலாறு படைத்த நாயகன்
அடுத்த முறை அவதாரம் எடுத்து
ஐந்தை ஆறாக மாற்றட்டும்,
ஆதரவளிப்போம் ஆனந்த்க்கு!
படத்திற்கு நன்றி:
http://www.ask.com/wiki/Viswanathan_Anand?o=2802&qsrc=999&ad=doubleDown&an=apn&ap=ask.com
nanru