மலர் சபா

புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

 

வயல்களில் களை பறிப்பவர்கள்

குவளை மலர்ச்செடிகளைக்

களைகளெனப் பறித்து

வரப்பு வழிகளில் போட்டிருப்பர்.

 

அப்பூகளின் தேனை உண்டு

சோர்வுற்று மயங்கி

அப்பூகளுக்குள்ளேயே கிடக்கும் வண்டுகள்

நாம் நடக்கையில் நம் பாதங்களில் மிதிபட்டு

இறக்கவும் நேரிடும்.

 

ஓங்கி அலை வீசும்

வாய்க்கால் வழியாகச் செல்லலாம் என்றாலோ

ஆங்கே

அழகாய் மேனியில் புள்ளிகள் உடைய

நண்டுகளும் நத்தைகளும்

சிக்கிச் சிதைய நேரிடும்.

 

நாம் கால்களில் மிதிபட்டு இறக்கவும் நேரிடும்.

அதனால் நமக்குக் கொலைப்பாவம் நேரிடும்.

அப்பாவத்தைத் தாங்குவது

நமக்கு மிகவும் அரிதாகும்.

 

வயல்வழி, சோலைவழி தவிர

மதுரை செல்வதற்கு வேறு வழியே இல்லை.

நெளிந்த கரிய தலைமுடியை உடைய கோவலனே!

நீ உன்னை விரும்பிய அன்பு மனைவியுடன்

செல்லும் போது

எதிர்ப்படும் இடர்களைக்

குறிப்பால் உணர்ந்து

அக்குற்றங்கள் நேராத வண்ணம்

அவளைப் பாதுகாப்பாயாக!

என்று கவுந்தியடிகள் கூறினார்.

 

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 86- 97
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *