விசாலம்

 

டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day.இந்த நாள் BEE என்ற {“Bereau of energy efficiency } என்ற அமைப்பு மக்களுக்கு விழிப்புணர்வைத் தர முழித்துக்கொள்கிறது. இந்த அமைப்பு 2001லிருந்து செயல்படுகிறது .பள்ளியில் இந்த நாள் வந்தால் ஆசிரியர்களுக்கு இரட்டிப்பு வேலை. மத்திய அரசின் வழியாக சில போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வைக்க வேண்டும் அதாவது எப்படி எனர்ஜியை மீத்து வருக்காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்ற கருத்தில் போட்டிகள் தொடங்கும். இதில் கட்டுரைப்போட்டியும் ,சித்திரப்போட்டியும் நிச்சியம் இருக்கும். இதில் ஜெயிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ரூ 33000 ஒதுக்கப்பட்டிருக்கும். பரிசுமுடிவுகள் வெளிவந்தவுடன் நேஷனல் எனர்ஜி கன்வெர்ஸேஷன் டே அன்று விழாப்போல் கொண்டாடுவார்கள்.விழாத்தலைவர் பரிசுகளை வழங்குவார்.

இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள் அனைத்தும் உள்ளன நீர்மின்சக்தி அணுமின்சக்தி என அனைத்தையும் உருவாக்கியது மனித ஆற்றல் என்ற சக்திதான், இதைச்சேமிக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை முயல வேண்டும். இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல் சேமிக்கலாம் சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்த விடுவார்கள் அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள் சிலர் தோசை வார்க்கும் தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள், சின்ன தவா வைத்தாலே தேவையான் சூடு பரவும் ,பெரிய குடும்பமானாலும் சிறிய குடும்பமானாலும் சாப்பாட்டிற்கு என்று ஒரு நேரம் ஒதுக்க ஒரே நேரத்தில் எல்லோருக்கும் சுடச்சுட பரிமாறமுடியும் அது இல்லாமல் நினைத்த நேரத்தில் தன் இஷ்டப்படி வந்து சாப்பிடும் பொருளை மறுபடியும் சுட வைக்க எனர்ஜி அங்கு வீணாகும். தவிர அதில் காய்களின் ஊட்டச்சக்தியும் குறையும்.

இல்லறத் தலைவிகள் தன் காரியமே கண்ணாயினார் என்பதுக்கொப்ப வேலை செய்தால் எரி பொருள் வீணாவதைத் த்டுக்கலாம் அடுத்ததாக மொபைலில் பேசிக்கொண்டே இருக்க அடுப்பை அணைத்தோமா இல்லையா என்ற சந்தேகம் வந்து அங்கும் எரி பொருள் வீணாகும். பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,இனி ஆண்கள் ராஜ்ஜியத்திற்கு வருவோம். சில ஆண்கள் ஷேவிங் செய்த்துக்கொள்ள குழாயைத் திறந்து விட்டபடி தங்கள் வேலையைத் தொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள். ஐயோ பரிதாபம் தண்ணீர் கீழே கொட்டியபடி இருக்கும் .இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து விட்டபடி வந்து செல்லில் பேச்சு தொடங்கி விடும் . பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று விழித்துக்கொள்வார்கள். “ஐயோ குழாயை மூடவேல்லையே .நல்ல வேளை இப்பவாவது ஞாபகம் வந்துதே .இல்லாவிட்டால் இந்த முசுடு வீட்டுக்காரன் என்னைப்பின்னி எடுத்துடுவான் “என்று தன் தவறை உணராமல் பேசுவதைக் கண்டிருக்கிறேன் சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டு பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட பின் முழித்துக்கொள்வார்கள்.

வீட்டுக்குழந்தைகளோ எல்லா அறையிலும் சுழலும் விசிறியைப் போட்டு விட்டு அதை அணைக்காமல் வெளியே சென்றுவிடுவார்கள் .ஒரு அறையை விட்டு வெளியே வரும்போது லைட் . ஏசி எல்லாம் அணைத்துவிட்டு வரும் வழக்கத்தை பெற்றோர்கள் தவறாமல் கற்றுக்கொடுக்க வேண்டும் .அதே போல் கணினியையும் அணைத்துவிட்டு வர பழக்கப்படுத்த வேண்டும் அரசை சார்ந்தவர்களும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை நான் கண்டிருக்கிறேன் .சில தெருல் பகலிலும் விளக்கு எரியும் ,,அதை அணைக்க மறந்து இருக்கலாம், இதே போல் ஆபீஸில் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடி சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே இல்லை. மைக்ரோஅவனில் தேவையான அளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் , வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி சேமிக்கலாம்.

தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்

ஜே.வி செர்னே சொல்கிறார்

ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற வார்த்தைகள்
வாகனங்களாக உள்ளன . “செய்து முடிப்பேன்” என்ற வாகனத்தில்
ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்
வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம் வானத்தைத் தொட்டுவிடலாம்

சக்தியைச்சேமிப்போம்!…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *