இந்த வார வல்லமையாளர்!
அண்ணா கண்ணன்
சித்திரம் பேசுதடி என்றன் சிந்தை மயங்குதடி என்ற வரிகளுக்கு இணங்க, ஓவியமும் நிழற்படங்களும் நம் உள்ளத்தை என்றும் கொள்ளை கொள்ளக் கூடியவை. புதிய திறமைகளை ஊக்குவிப்பதில் வல்லமை எப்போதும் முன் நிற்கிறது. அவ்வகையில் சிறந்த நிழற்படக் கலைஞர்களைக் கவுரவிக்க உள்ளோம்.
திவாகர் அவர்கள் பயணத்தில் இருப்பதால், இந்த வார வல்லமையாளரை வல்லமை பிளிக்கர் படக் குழும நிர்வாகி சாந்தி மாரியப்பன் (அமைதிச் சாரல்) தேர்ந்தெடுக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களும் சாந்தியே தேர்ந்தெடுக்க உள்ளார்.
இனி, சாந்தியின் மடல் –
முதல் தேர்வு: வனிலா பாலாஜி.
இயற்கையான ஒளியை மிகச் சிறப்பாகக் கையாள்வது இவரது தனித் தன்மை. வீட்டினுள் எடுத்தவையாக இருந்தாலும் கூட அவரது படங்களில் காணப்படும் அழகு சொல்லி முடியாது.
இந்தப் படத்தில் மரப்பாச்சிப் பொம்மைகளின் மேல் படிந்திருக்கும் மெல்லிய ஒளி ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது. அருமையான காட்சியமைப்பு, முரண்பாடான வண்ணங்கள், nice arrangement, மிக மிகத் துல்லியமான படப்பிடிப்பு என்று எல்லாமும் இந்தப் படத்திலிருந்து கண்களை எடுக்க விடாமல் கட்டிப் போடுகின்றன.
http://www.flickr.com/photos/vanilabalaji/11099741773/in/pool-1922937@N20
மேலும் படங்களை இவரது ஃப்ளிக்கர் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.
http://www.flickr.com/photos/vanilabalaji/with/11338932554
சாந்தியின் தேர்வினை வழிமொழிந்து, வனிதா பாலாஜி அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவரது திறனும் புகழும் மேன்மேலும் உயர வாழ்த்துகள். உரியவரைத் தேர்ந்தெடுத்த சாந்திக்குப் பாராட்டுகள்.
கடைசி பத்தியில் விசாலம் அம்மா –
தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்.
Arumaiyaana Pthivu..nerthiyaana padangal vazthukkal venila madam
வாழ்த்துகள் Vanila,thanks a lot Shanthi,Pavala and Vallamai Team 🙂