ஊழல் நாற்பது
இல்லறத்தில்
- கொட்டுகிற குழாய்களை நிறுத்த வேண்டாம்
- குடியிருப்பில் குப்பைகளை அகற்ற வேண்டாம்
- மின்சாரம் வீணடிக்க வருந்த வேண்டாம்
- அண்டை வீட்டு சண்டைகளை நிறுத்த வேண்டாம்
- அறிவுரைகள் என்று குட்டை குறைக்க வேண்டாம்
கல்லூரியில்
- சிகப்பு சிக்னல் விளக்குகளை மதிக்க வேண்டாம்
- சீக்கிரத்தின் த்ரில் ஸ்பீடு குறைக்க வேண்டாம்
- கட் அடித்து வகுப்பறைக்கு செல்ல வேண்டாம்
- பிட் அடித்து மாட்டும் வரை அசர வேண்டாம்
வாலிபத்தில்
- சீக்கிரத்தில் பணம் சேர்க்க நேர்மை வேண்டாம்
- பெட் அடித்து சூதாட தயங்க வேண்டாம்
- அடிதடியில் இறங்காமல் தடுக்க வேண்டாம்
- சகிப்புத்தனம் சலிப்பு தரும் சேர்க்க வேண்டாம்
- நல்லவரின் அறிவுறையை நினைக்க வேண்டாம்
- வல்லவரின் கால்பிடிக்க தயங்க வேண்டாம்
- படித்தால் தான் பட்டம்யென அஞ்ச வேண்டாம்
வேலை கிடைத்த பின்
- நம்மைவிட முன்னேற்றம் யெவர்க்கும் வேண்டாம்
- நட்புதனில் இலாபமின்றி சேர்க்க வேண்டாம்
- கொடுக்கும் குணம் எடுக்கும் வரை குறைய வேண்டாம்
- கெடுக்கும் மனம் இருக்கும் வரை மறைய வேண்டாம்
- எடுக்கும் தனம் திருட்டுஅல்ல விடவும் வேண்டாம்
- அலுவலக தூக்கத்தை நிறுத்த வேண்டாம்
- தொலைபேசி அரட்டைகளை குறைக்க வேண்டாம்
ஆட்சிக்கு வந்தபின்
- எதிரிகூட கூட்டுசேர வெட்கம் வேண்டாம்
- வாக்குறுதி தொகுதி பற்றி நினைக்க வேண்டாம்
- அன்பளிப்பாய் தருவதைநீ மறுக்க வேண்டாம்
- அரசியலில் இதுசகஜம் மறக்க வேண்டாம்
- பொய் சொல்வார் முன் மெய்யை பேச வேண்டாம்
- புறம் கூறி களிப்பாற்று கலைக்க வேண்டாம்
- விதிகளை மீறிடவே தயங்க வேண்டாம்
- விளயாட்டு கலவரங்கள் அழிக்க வேண்டாம்
- பதவி தரும் உரிமைகளை அறுக்க வேண்டாம்
வியாபார யுக்தி
- தொலைகாட்சி நாடகங்கள் தவிர்க்க வேணடாம்
- விளம்பரங்கள் கண்டு மனம் வெம்ப வேண்டாம்
- ஆபாச ஆடைகளை தடுக்க வேண்டாம்
- கலப்படத்தில் கஞ்சத்தனம் பிடிக்க வேண்டாம்
- பணம் கொடுத்து காரியங்கள் இழிவு வேண்டாம்
- பிறர் செய்யும் பிழைகளை மறக்க வேண்டாம்
- தன்னிச்சை செயல்படுத்த தயங்க வேண்டாம்
- சுதந்திரமாய் தப்பு செய திகைக்க வேண்டாம்
சாரம்
குடிகளின் செயல்பாட்டில் இத்தனை ஊழல்
கோனென்ன மந்திரியும் அத்தனை ஊழல்
நடப்பதுதான் நடக்கும்மென அறிந்த பின்னும்
கிடைப்பதுதான்கிடைக்கும் என புரிய வேண்டும்
கண்மூடி கொண்டாலும் இத்தனையும் நடக்கும்
கண்திறந்து கண்டாலும் இத்தனயும் நிகழும்
ஊழலில் உலகமெல்லாம் ஊறிஊறி போனதனால்
நீயும் நானுமென விதிவிலக்கா! சொல்லுங்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அத்தவறுகளே ஊழல்களின் நதிமூலம் என்று விளக்கும் தங்களின் மனக்குமுறல்களை உணர முடிகிறது. பகிர்விற்கு நன்றி ஐயா!