இளமை கொலுவிருக்கும் – கவிஞர் கண்ணதாசன்

0

இளமை கொலுவிருக்கும்..

 

கவிஞர் காவிரி மைந்தன்

 

அந்தக் காலத்தில் இந்தப் பாடல் பெற்ற வரவேற்பு அமோகம்!  ஆம் மோகம் குடியிருக்கும் வரிகள்!  அதற்கேற்ற காட்சியமைப்பு!! இந்தப் பாடல் இரண்டு முறை படத்தில் வரும்! கதாநாயகி பாடுவதாகவும்.. மற்றுமொரு முறை கதாநாயகன் பாடுவதாக!

மொத்தத்தில் இப்பாடல் வரிகள் பெண்மையைப் போற்றுகின்றன. பெண் இல்லையென்றால் இவ்வுலகில் என்ன இருக்கிறது என்கிற கேள்வியை நம் முன் வைக்கிறது!  கவிஞரின் இதயத்திலிருந்து ஆழமான அழுத்தமான வரிகள் விழுந்திருக்கின்றன!

அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?

அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?

Statement of facts.. வார்த்தைகளில் சொல்லிவைத்தால் அது வரியாக இருக்கும்!  வளமையாக கவிதையில் சொல்லி வைத்தால் அது பாடலாகும்! இரண்டு வரிகள்தான்!  எத்தனைப் பொருள்!!

கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

 

பெண்ணைப் பாடாத கவிஞன் எங்கே?  இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ..  அவள் இயற்கை தந்திருக்கும் சீதனப் பரிசல்லவோ?

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

 

பழைய பாடல்தான்!  மனதில் பதியும் பாடல்!  இளமையை ஏற்றிவைத்து பெண்மையைப் போற்றிவைக்கும் பாடல்!

 

பாடல்: இளமை கொலுவிருக்கும்  

திரைப்படம்: ஹ்லோ மிஸ்டர் ஜமீன்தார்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்:  கவிஞர் கண்ணதாசன்

இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி
ஆண்டு: 1962

ஒஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
அஹா அஹா ஹ ஹா ஹா ஹா ஒஹோ ஒஹோ ஒஹோஹோ

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

 

http://www.youtube.com/watch?v=MGUAdeSS0xA

 

http://www.youtube.com/watch?v=K1eC8lxqusk

இளமை கொலுவிருக்கும் (ஆண்) – Ilamai koluvirukkum (male)
இளமை கொலுவிருக்கும் (பெண்)-Ilamai Koluvirukkum (Susila)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *