-செண்பக ஜெகதீசன்

 

உருக்கிய தங்கம்தான்

உருப்பெறுகிறது

விலையுயர் அணிகலனாய்..

 

அடித்து நீட்டிய செம்புதான்

எடுக்கிறது வடிவு,

மின்கம்பியாக..

 

உளியால்

உடைபடும் கல்தான்

உருவமாகிறது சிலையாக..

 

சிந்தித்திடு மனிதா,

சிறிதும் பெரிதுமாய்த் துன்பந்தான்

வாழ்வில்

சிறப்பைத் தருகிறது…!

 

         

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *