நுதற்கண் கொண்டவனே, நூதன மானவனே,

புறக்கண் காட்சிகளில், பூரணமாய் நிறைந்தவனே,

அகக்கண் கொண்டெந்தன் ஐம்புலனை அடக்கி,

முதற்கண் அடிபணிந்து வணங்குகிறோம் உன்னை!                                                      1

 

வட்டூர் வைரவனை வணங்கிப் பணிந்து,

மொட்டாய் இருக்கும் மனமடலை விரித்து,

கொட்டும் கருணை மழையில் நனைந்து,

கட்டுண் டவனது அன்பில் கரைவோம்!                                                                                  2

 

ஆற்றில் தவழ்ந்த ஆதவப் பிள்ளையாய்,

ஆற்றல் நிறைந்த நாதனும் தவழ்ந்து,

போற்றும் புகழ்மோர்ப் பாளையம் வந்து,

சீற்றம் தணிந்து சீருடன் அமர்ந்தான்!                                                                                     3

 

மாசிச் சிவன் இராத்திரி தோறும்,

பூசித் தவன் காலடி பணிந்தால்,

காசிக் கரை கங்கை சென்று,

பூசித் திடும் பலனைப் பெறலாம்!                                                                                                4

 

ஆதிநாத ரந்தமற்ற சோதி தன்னை,

ஓதிமாத மாசிதன்னில் நோன்பி ருந்து,

சாதிபேத மேதுமற் றமுத ளித்து,

நீதிகீத மோதிவாழு முயர் குலத்தர்!                                                                                          5

 

அட்ட மித்தி னங்கள் தோறும்,

வட்ட மிட்டுன் னடிப ணிவோம்!

நட்ட மிட் டருள் புரிந்து,

சுட்ட நீறுபூசி யாடும் நாதனே!                                                                                                      6

 

இடுகா டொடுவாழ்ந் திடுநா யகனே,

நெடுநா ளடியா ரொடுவாழ் பவனே,

தொடுவா னடியோ டுறுசெவ் வழகில்,

நடுநா யாகமாய் நடமா டிடடா!                                                                                                   7

 

முற்றும் துறந்த மூல நாதனை,

குற்றம் தடுக்கும் ஆல காலனை,

வற்றா கங்கை சூடு மாடனை,

நற்றா மரைபோல் மலர்ந்து வணங்குவோம்!                                                                    8

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *