கவிஞர் காவிரி மைந்தன்

கவிஞர்கா.மு.ஷெரீப்

· எத்தனையோ திரைப்பாடல்கள் நம் மனதைத் தொடுகின்றன. இன்னும் சில பாடல்கள் மனதில் நிறைகின்றன. தொடுகின்ற பாடல்களில் வரிகள் சுகமாயிருக்கும்! நிறைகின்ற பாடல்களில் அர்த்தங்கள் நிரம்பக்கிடைக்கும்!

· வெறும் கற்பனைப் பூக்களை விற்பனை செய்யாமல், கருத்து முத்துக்களை அள்ளிவழங்கிய பெருமையை இந்த ஒற்றைப்பாடலில் ஒருவர் தட்டிச்செல்கிறார்.

· அட.. விவரிக்க வேண்டியிராத வைரங்களைச் சொற்களாக்கி, எதார்த்தமான வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகின்ற கவிஞர்! இப்பாடல் எழுதிய காலம் சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்குப் பின்னரும் இன்றைக்கும் பொருந்துகின்ற ஜீவாம்சம் தெரிகிறது பாருங்கள்!

· எளியவார்த்தைகளைமட்டும் பயன்படுத்தி இன்னும் சொல்லப்போனால், நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களைவைத்து இவர் பட்டியலிட்டுள்ள அனுபவப்பதிவுகள் மானுடவாழ்விற்கு என்றைக்கும் தேவைப்படுகின்றன!

· வாழ்ந்தாலும்ஏசும்தாழ்ந்தாலும்ஏசும்

வையகம்இதுதானடா..

வாழ்ந்தாரைக்கண்டால்மனதுக்குள்வெறுக்கும்
வீழ்ந்தாரைக்கண்டால்வாய்விட்டுச்சிரிக்கும்
இல்லாதுகேட்டால்ஏளனம்செய்யும்
இருப்பவன்கேட்டால்நடிப்பெனமறுக்கும் (வாழ்ந்தாலும்ஏசும்..)

பண்பாடுஇன்றிபாதகம்செய்யும்
பணத்தாசையாலேபகைத்திடநினைக்கும்
குணத்தோடுவாழும்குடும்பத்தைஅழிக்கும்
குணம்மாறிநடந்தேகொடுமையைவிளைக்கும்

(வாழ்ந்தாலும்ஏசும்..)

 

· படம் : நான்பெற்றசெல்வம் இசை : ஜி. ராமனாதன்

· பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன் பாடலாசிரியர்: கா.மு.செரிப்

· கவிஞர் கா.மு.ஷெரீப் என்னும் கவியுள்ளத்திலிருந்து உருகிய வெள்ளமிது! எக்காலத்திற்கும் ஏற்றபாடலாய் – கேட்டு ரசித்த பாடலாய் நில்லாமல் மெய்யுணர்வால் மேனிசிலிர்த்த பாட்டு! ஜி.இராமனாதன் இசையில் இது நான் பெற்ற செல்வத்திற்காக விளைந்த பாடல்! ஏழிசைவேந்தர் டி.எம்.செளந்திரராஜன் குரலில் நம் இதயங்களில் நிறைந்த பாடல்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *