திருமால் திருப்புகழ் (29)
கிரேசி மோகன்
தனன தனதான தனன தனதான
தனன தனதான தனன தனதான -தனதான….
————————————————————————————————————————
“பிளிரும் கஜம்வாழ பறவை முதுகேறி
ஒளிரும் சுடரேந்தி முதலை தலைசாய -விரைவோனே
தளர இடையாடை திலக நுதல்கூன
தலையின் மயில்பீலி சரிய படையோடு -மெதுவாக
துயில இடையாயர் தளிகை அறைதாவி
உறியில் தயிர்பாலை திருட வரும்போது -விரைவோனே
குளிர குளமாடும் மகளிர் அணிசேலை
உருவி கரைமேவி மருத மரமேறி -மெதுவாக
அலறி ஒருநாளில் அழுத மகள்சோகம்
விலக துணிசேர்க்க விரையும் மெதுவான -பெருமாளே
—————————————————————————————–