மலர் சபா

மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டுத் தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில் உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்

rose-garden-3-bo-li

மூன்று திங்களை அடுக்கி வைத்தது போல் விளங்கிய
முப்பெரும் குடையின் கீழ்
மாலையாக மலர்ந்து தொங்கும்
அசோக மரத்தின் அடர்ந்த நிழலின்கண்
சிவந்த கதிர்களையுடைய
கதிரவனின் ஒளி போல் விளங்கும்
அருகதேவன் எழுந்திருளியிருக்கிறான்.
அவன் தனக்கென்று ஓர் ஆதி இல்லாதவன்.

அவனை அம்மூவரும் வணங்கித் தொழுதனர்.
பின் அங்கே தவப்பள்ளியில் தங்கியிருந்த
முனிவர் அனைவர்க்கும்
முன்னர் ஆற்றிடைக் குறையாகிய
திருவரங்கத்துச் சோலையில்
சாரணர் தமக்கு அருளி உரைத்த
அற மொழிகளைக் கவுந்தியடிகள் எடுத்துரைத்தார்.

அன்றிரவு அருகதேவன் தங்கியிருந்த
அந்த இடத்தில் தங்கியிருந்து,
பின் வைகைறையில் தென் திசை செல்ல விரும்பி
உறையூரை விட்டு நீங்கி நடக்கலாயினர்.

ஞாயிறு கிழக்குத்திசையில் இருந்து
ஒளி பர்ப்பி எழுகின்ற வேளை;
நீர்நிறைந்த வளம் பொருந்திய
வயல்களும் குளங்களும்
பொலிவுற்று விளங்கும்
அழகு பெற்ற பூஞ்சோலை வழியே சென்றனர்.
வழிப்போக்கர்கள் தங்கும் மண்டபத்தை அடைந்தனர்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 – 14

 
படத்திற்கு நன்றி:
http://www.mumsema.com/misafir-sorulari/154161-bahar-mevsimi-gul-bahcesi.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *