திருமால் திருப்புகழ் (45)
கிரேசி மோகன்
ஒருவனைப் புகழ்வதை விட அவனது BETTER-HALF மனைவியைப் புகழ்ந்தால் அவன் அருள் இன்னும் வேகமாகக் கிட்டும்….அந்த BETTER-HALF , BUTTER-HALFகண்ணனின் மனம் கவர்ந்த மனைவியாய் இருந்தால் ,கேட்கவே வேண்டாம் அருள் கொட்டும்….மேலும் இந்த BETTER-HALF, வில்லிபுதூர் பட்டர் பிரான் பெண் ஆண்டாள்….மாதங்களில் நான் மார்கழி என்று மாலை கீதையில் மார்தட்டிக் கொள்ள வைத்த, முப்பது(திருப்பாவை) செப்பிய மங்கை….ஆக இன்று ‘’ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று’’ அருணகிரி சந்தத்தில் ஆண்டாள் திருப்புகழ்….
“ஆடிவரும் பூரமதில் பூத்தமுகம் ஒன்று
ஆசுகவி பட்டர்மகள் ஆனமுகம் ஒன்று
காடுவன மாலிதனில் கண்டமுகம் ஒன்று
மாடமதில் ரங்கனிடம் காதல்முகம் ஒன்று
சூடும்மலர் மாலைதனை சூடும்முகம் ஒன்று
ஸ்ரீவிலிபு தூரில்கவி செப்புமுகம் ஒன்று
கூடலுடன் ஊடலையும் கூறுமுகம் ஒன்று
கீதையுடன் பாசுரமி ணைத்ததமிழ் தாயே”