பிச்சினிக்காடு இளங்கோimages

யாரோ ஒருவருக்கு
இதமூட்டும் தென்றல் நான்
யாரோ ஒருவருக்குக்
கால்வைக்கும் படிக்கல் நான்

யாரோ ஒருவருக்குக்
கைகொடுக்கும் கைநான்
யாரோ ஒருவருக்கு
முதலில்  வருமுதவி நான்

யாரோ ஒருவரின்
புண்ணுக்கு மருந்து நான்
யாரோ ஒருவரின்
புன்னகைக்குக் காரணம் நான்

யாரோ  ஒருவரின்
சுமை தாங்கி நான்
யாரோ ஒருவரின்
கை விளக்கு  நான்

யாருக்கோ  ஒருவனாய்
யாவர்க்கும் கவிஞனாய்
வாழும் ஆசையில்
வாழ்கின்ற மனிதன் நான்

http://online.wsj.com/news/articles/SB10001424052702303753904577450841336465230

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *