திருமால் திருப்புகழ் … (48) – பெருமாள் துவாதச நாமத் துதி..

1

கிரேசி மோகன்

அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….
—————————————————————————————————————

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….
———————————————————————————————————————-

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கேசவன்
——————

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும்
பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

———————————————————————————————————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

நாராயணன்
————————–
“சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
எறியசு தர்சனம் விரல்விட்டு
துரிதநி வாரண முனிகள்த போவனம்
பறையும்க தாம்ருத காரணனே
முரளிம னோகர கமலப தாம்புய
அனந்த”ந ராயண” பூரணனே”….(2)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

—————————————————————————————————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

மாதவன்
——————

“அவையென இவையென அளவிடல் தவறென
கவிமணி மலையணில் கூட்டியதை
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
குளிர்மழை காத்தனை யாதவனே
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக்
கரணம்செய் காக்கும் ”மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

——————————————————————————————————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கோவிந்தன்
————————

“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

——————————————————————————————————————–

ஓவியம் ; கேஷவ்
ஓவியம் ; கேஷவ்

விஷ்ணு
—————-

“செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
முகநுனி தாரணி கொண்டவனே
சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
விதவித பந்தியில் உண்டவனே
விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
தொழுரகு ராமனும் பாகவதக்
கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

——————————————————————————————————————-

 

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

திருவிக்ரமன்
—————————-

“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்”திரு விக்ரம”
வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம்
பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
சரணடை கோவண சந்நிதியில்”….(6)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

————————————————————————————————————-

ஓவியம்: கேஷவ்
ஓவியம்: கேஷவ்

வாமனன்
——————

“சிறைவசு தேவகி கருவச மாகிட
இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
——————————————————————————————————————-

ஓவியம்: கேஷவ்
ஓவியம்: கேஷவ்

சீதரன்
————

“இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
திருமகள் பூணிடும் ”சீதரனே”
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

——————————————————————————————————————–

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

ரிஷிகேசன்
——————–
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை
தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

——————————————————————————————————————–

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

பதுமநாபன்
————————
“கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை
தசமுக பூஷனை இம்சைதரும்
இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன்
துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
குறைசிசு பாலனை மதுகைட பாணனை
வதம்புரி மாலனை நம்பிடுவாய்
பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை
’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

—————————————————————————————————————–

ஓவியம் : ராஜா ரவிவர்மா
ஓவியம் : ராஜா ரவிவர்மா

தாமோதரன்
————————-

“கரமொடு களவாய் பிடிபட உனதாய்
உரலிட இழு”தா மோதரனே”
மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர்
மறுவுல கேத்திடும் ஆதரவே
புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை
வெளியுற வைத்திடும் யவ்வனனே
சரியென தப்பென அறியும்ம னத்தினை
அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

——————————————————————————————————————–

images (3)
மதுசூதனன்
———————

“மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை
பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை
துருபதைக் எட்டிட பட்டதனை
புகுவிட பூதனை விடவுடல் வேதனை
முலையுறி மா”மது சூதனனே”
புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட
வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
————————————————————————————————————————-

படங்களுக்கு நன்றி:

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமால் திருப்புகழ் … (48) – பெருமாள் துவாதச நாமத் துதி..

Leave a Reply to Su.Ravi

Your email address will not be published. Required fields are marked *