பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 

இதை இதைimages (4)
எழுதவேண்டுமென்று
எண்ணியதில்லை
எண்ணுவதுமில்லை

அது அது
வந்து நச்சரிப்பதால்தான்
எனது எழுதுகோல்
உச்சரிக்கிறது

அதுவரை தெரியாதது
அடுத்தடுத்து தெரிகிறது

இருட்டுக்குள் வெளிச்சம்
வழிகாட்டுகிறது

சூத்திரம் இல்லாமல்
சூட்சுமம் அவிழ்கிறது

திறவுகோல் இல்லாமல்images (3)
பூட்டுகள் திறக்கின்றன

பார்ப்பதால் உடன்
பாதிக்கப்படுகிறேன்

எண்ணுவதால் என்னை
இழந்துவிடுகிறேன்

கவனம் கூடி
கரைந்துவிடுகிறேன்

பறவையாகி
பறந்துவிடுகிறேன்

விதவிதமாக
பொருள்புரிகிறேன்
புரிந்ததைப் புதிதாய்ப்
புரியவைக்கிறேன்

அதிசயம்கண்டு
அசந்துவிடுகிறேன்

வியப்புற்று என்னையேteaching-poetry-to-children
வியக்கிறேன்
ஆனந்தமாய் ஒரு
கவிதையடைகிறேன்

கவிதையைக்கண்டு
கர்வமடைகிறேன்

அக்கணத்திலேயே நான்
கவிஞனாகிறேன்

(15.04.2014 அன்று 5.50க்கும் 6.30க்கும் இடையில் பேருந்து எண் 67 ல் விளைந்தது)

 

படத்திற்கு நன்றி :

http://go2uttyler.blogspot.in/2013/04/experimental-poetry-self-discovery-and.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *