கையில் விலையுயர்ந்த
கரடி பொம்மை வைத்து
ஏ.சி. காரில் அம்மா மடியில்
அமர்ந்து சிக்னலில்
தெரு நோக்கும் குழந்தைத்
தாயிடம் அழுது அடம் பிடிக்கிறது
பிச்சைக்காரியின்
குழந்தையின் கையிலிருக்கும்
மரப்பாச்சி வேண்டுமென்று…
கரடி பொம்மையைச்
சிறிது வெறித்துவிட்டுத்
தலை திருப்பித்
தனது மரப்பாச்சிக்கு
முத்தம் கொடுத்துச் சிரிக்கிறது
பிச்சைக்காரியின் குழந்தை…
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார்.
இவருடைய கவிதைத் தொகுப்பை,’விரிசலுக்குப் பிறகு’, என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.