கிரேசி மோகன்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

——————————————
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
’’கண்ணன் அந்தாதி’’
———————————–
ஆழ்ந்து படித்தென்ன, ஆராய்ந்து பார்த்தென்ன,

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம், -தாழ்ந்த,
சபரியெச்சில் ஏற்ற, சமத்துவத்தின் மூலம்,
அபரி மிதமான, அன்பு….(21)

அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்
பாடி அணுகுகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா,
வாடிக்கை யாளனாக வா….(22)

வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
தாவென்றால் கற்பகத் தாயவன், -சோவென்று,
மாரியருள் பெய்கின்ற, காரிருள் கண்ணனே,
வேறிருள் போக்கும் விளக்கு….(23)

விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், -அளப்பரிய,
ஆதியே, உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
தேதியைச், சொல்லியெனைத் தேற்று….(24)

தேற்றி விஜயனைத், தேரேற்றி வில்லேந்தச்
சாற்றினாய், கீதையை சர்வேசா, -சேற்றினுள்,
பஞ்சப் புரவிகட்(கு) அஞ்சிப் புதைந்திடும்,
நெஞ்ச ரதத்தை, நிறுத்து….(25)

—————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *