ரிஷான்

 

சிவரமணிக்கு…

 

உன்னிடமொன்றைச் சொல்லும்59255_605371066139667_518905472_n

தேவை எனக்கிருக்கிறது

எனினும் நான் வாய் திறக்கும்வரை

பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்

உன்னைப் பார்க்கவென

நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்

அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

 

அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்

உனை நான் இதயத்தில் உருவகித்தபடி

போய்க் கொண்டிருந்தேன்

எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்

இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து

உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

 

அந்தகாரத்துக்குள் பிறந்த நான்

அந்தகாரத்துக்குள் பிறந்த நீ

ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமென்று ஐயமுற்ற அவர்கள்

இறுதித் தாரகையையும் தூள்தூளாக்கினர்

நிரந்தரமான இருளுக்குள்ளேயே

எங்களைப் பிரித்துக் கொன்றுபோட்டனர்

 

இப்பொழுது பிணங்கள்

கரையொதுங்குகையில்

நீயும் நானும்

தற்கொலை செய்துகொண்டதாக அறிவிப்பார்கள்

 

நீ வடக்கிலும், நான் தெற்கிலும்

இன்னும் நிரப்பப்படாத

பொதுக் கல்லறைகள் இரண்டினுள்ளே

வெவ்வேறாக படுத்திருப்போம்

 

இக் குளிர்ந்த நிலக் கருவறைக்குள்ளே இடைவெளியானது

பிணங்களாலும் இருளினாலும் நிறைந்திருக்கிறது

 

சிவரமணி, அன்பிற்குரிய சகோதரி

வடக்கிலும் தெற்கிலும்

புதைக்கப்பட்ட அனேகரோடும்

இன்னும் நிறைய நாட்கள்

இங்கு நாங்கள் அமைதியாகச் சாய்ந்திருப்போம்

 

சகோதர விழிகளிலிருந்து உதிரும்

உஷ்ணக் கண்ணீர்த் துளியொன்று வந்து

எமது குளிர்ந்த நெற்றியை மெதுவாக முத்தமிட்டு

இம் மரணத்தின் தொடர்ச்சி

இத்தோடு முடிந்துவிட்டதென உத்தரவாதமளித்து

எம்மை மீண்டும்

வாழ்க்கையை நோக்கி அழைக்கும்வரை

நாமிங்கு அமைதியாகச் சாய்ந்திருப்போம்

 

ஏனெனில் மரணத்துக்கு முன்னர்

நீ இவ்வாறு எழுதியிருக்கிறாய்

 

“ஆனால்

நான் வாழ்ந்தேன்

வாழ்நாளெல்லாம் நானாக

இருள் நிறைந்த

பயங்கரங்களின் ஊடாக

நான் வாழ்ந்தேன்

இன்னும் வாழ்கிறேன்.”

 

– அஜித் சி. ஹேரத்

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *