கே. ரவி

10252036_618978758193600_5068132543127217621_n

நேத்துரா வேளயிலே நீபாத்த பார்வையிலே
நெஞ்செல்லாம் சல்லடையாப் போச்சுதடீ பொம்மயிலே ஓ! ஓஓஓ!

காத்துலே பூவாசங் கலந்துவந்து மயக்குதடீ
கண்ணுக்குள்ளே ஓன்சலங்க கலகலன்னு சிலும்புதடீ
ஆத்துமணல் படுகையெல்லாம் அணலாக் கொதிக்குதடீ
அம்மாடீ ஓம்மொவந்தான் அங்கும் இங்கும் தெரியுதடீ
(நேத்துரா)

பூத்தநெல வாமனச நான்தொறந்து வச்சீருக்கேன்
பூப்போலப் பாதம்வச்சுப் பூமுடிக்க வந்தீருநீ
காத்திருந்து காத்திருந்து காலம்வீ ணாச்சுதடீ
கண்ணம்மா ஓன்பெயரக் காட்டுக்குயில் கூவதடீ
(நேத்துரா)

நிமுந்தா சூரியனாம் குனிஞ்சாத்தான் கும்மிருட்டாம்
ஒன்னப்பத்தி ஊர்முழுக்கப் பாட்டுக்கட்டிப் பேசுதடீ
தெரிஞ்சா ஆசப்பட்டேன் தேகத்தயா காதலிச்சேன்
புரிஞ்சா போதுமடீ பொய்வேசம் ஏதுக்கடீ
(நேத்துரா)

கூட்டுக்குள்ள நானிருந்தா கூடமுடி யாதுனுதான்
பாட்டுக்குள்ள ஏறிகிட்டுப் பாதிவழி வந்துபுட்டேன்
மீதிவழி நீயிறங்கி மின்னலா வந்துதொடு
மீறமுடி யாதபடி வார்த்தகளப் போட்டுவச்சேன்.
(நேத்துரா)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *