-செண்பக ஜெகதீசன்

பாலைவனமாக நனவு,
பூங்காவாகப் பூத்துக்குலுங்கும்          Garden_Fountain
கனவு…

எதிர்மறைகள்
எப்போதும் உள்ளவைதான்…

நனவு
பூங்கா ஆகிட
நம்பிக்கை நீருற்று,
துணிவை உரமாக்கு,
துணைக்கரங்கள் தானேவரும்!

கனவுத் தூக்கத்தைக்
கலைத்துவிட்டு

நனவுப் பயணத்தில்
நம்பிக்கை வை!

நம்பிக்கைகள்,
அவை
கைவிடுவதில்லை…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *