பயணத்தில்…
-செண்பக ஜெகதீசன்
பாலைவனமாக நனவு,
பூங்காவாகப் பூத்துக்குலுங்கும்
கனவு…
எதிர்மறைகள்
எப்போதும் உள்ளவைதான்…
நனவு
பூங்கா ஆகிட
நம்பிக்கை நீருற்று,
துணிவை உரமாக்கு,
துணைக்கரங்கள் தானேவரும்!
கனவுத் தூக்கத்தைக்
கலைத்துவிட்டு
நனவுப் பயணத்தில்
நம்பிக்கை வை!
நம்பிக்கைகள்,
அவை
கைவிடுவதில்லை…!