மழைத்துளிகள்!
– தாரமங்கலம் வளவன்
மனிதன் மமதையில்
‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என்கிறான் ’
பூமியிலிருக்கும் மனிதன்
வானத்தைத் தொட்டுவிட நினைக்க,
நீ பூமியைத் தொட்டுவிட
ஓடி வருகிறாய்…!
வந்து பார்த்து,
மனிதனும், பூமியும்
பிடிக்கவில்லை என்று
பூமிக்கு வருவதை மட்டும்
நிறுத்தி விடாதே…!
நீ வருவதை நிறுத்தி விட்டால்,
மனிதக் கூட்டம் ஒட்டு மொத்தமாய்
உன் இருப்பிடத்திற்கு
ஆமாம்-
வானத்திற்கு வந்து விடுவார்கள்!