கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“இளங்கன்று இறையறியாது”
————————————-
“மூடநெய் பெய்யும், முழங்கை வழித்துண்டு,
மாடுமை வண்ணனை மேய்ந்திட, -ஒடிவந்த,
கன்று பொறாமையில், “கோனாரைக் கொஞ்சுதலேன்,
நன்றா!” எனவிறைப்பாய் நின்று”….கிரேசி மோகன்….
மாட்டிக்கிட் டான்மாட்டுக், கிட்டக்’கிட் டானி’ன்று,
போட்டக் குளம்படியில்: ,பாரத -ஆட்டத்தில்,
பாண்டவன் சேயை பரிதவிக்க விட்டாயே!,
வேண்டும்கட் டிக்கவேண்டும் வேணு’’….கிரேசி மோகன்….
கிட்டான் -செல்லமாகக் கண்ணன்….
பாண்டவன் சேய்-அபிமன்யு பத்ம வியூகத்தில் அகப்பட்டுக்கொண்டது….