கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“என்னதவம் செய்த எசோதை” புகார்கேட்டு,
என்னஅவம் செய்தாய் எனக்கேட்க, -கண்ணனவன்,
பூமியைக் காக்கவே, பாகவதம் செய்கின்ற,
சாமியென்றால் நம்புவாளோ சொல்”….! கிரசி மோகன் ….
“வெக்கத்தை விட்டுறியில் வெண்ணெய் திருடியதை,
பக்கத்து வீட்டம்மா போட்டுடைக்க, -திக்கத்து,
கொள்ளை அடித்ததைக் கண்ணால் கொடுத்ததால்,
வெள்ளையாச்சோ பாப்பா விழி”….கிரேசி மோகன் ….