-செண்பக ஜெகதீசன்
வெள்ளைத் தாமரை உன்வாசம்
வீணை செய்திடும் உன்ஓசை,
பிள்ளைத் தமிழ்முதல் பெருங்கவிதைப்
பனுவல் பலதிலும் நிறைந்திருப்பாய்,
அள்ளி அருளது தந்திடுவாய்
ஆய கலையெலாம் நீதருவாய்,
பள்ளித் தலமெலாம் உறைபவளே
பணிந்தோம் வாணித் தாயவளே…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
மிக அழகான வரிகள்! இலையிலே முதலில் பாயசம் வைப்பார்கள். அதன் சுவையில் மயங்கிப்போய், அது மீண்டும் எப்போது விரிவாக வரும் என்று காத்திருப்போம்.
காத்திருக்கிறேன்!
இசையுடன் இயைந்த
இன்தமிழ்க் கவிஞரின் வாழ்த்தை,
இயலுடன் இசைதரும்
வாணியின் வாழ்த்தெனக் கொள்கிறேன்..
மிக்க நன்றி…!