-ரா. பார்த்தசாரதி

உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன்   gandi
நேர்மை எங்கே என்று எல்லோரிடத்திலும் கேட்பேன்
எளிமை எங்கே எனத் தேடி அலைந்து கொண்டிருப்பேன்
தூய்மை  எங்கே என மனம் குமுறித் துடித்துப்போவேன்

சத்தியத்திற்கே ஒரு சத்தியசோதனையா என எண்ணிடுவேன்
’அகிம்சை’  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன்
மனித நேயத்தை இந்நாட்டில் எங்கே என்று கேட்பேன்
நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன்

அன்று வெள்ளையரை வெளியேற்ற அமைதிப் போரைத் துவக்கினேன்
இன்று மக்கள் தண்ணீருக்காகப் போராட்டத்தை நடத்துகிறார்களே
எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே
நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே

நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின் விடுதலைக்காகவே
இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே
என்னைத் தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே
என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே?

என் மதிப்பு, என் தலை ரூபாய் நோட்டின் முகப்பிலே
என் கொள்கைகள் எல்லாம் வீசப்படுகின்றதே தெருவிலே
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றேனே
இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *