கிரேசி மோகன்
சூரி நாகம்மாளின் ‘’ரமணாஸ்ரம லேகுலு’’(ஸ்ரீரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள்) என்ற புத்தகத்தில் ‘’தெலுங்கு பாகவதத்தில் சுகமஹரிஷி பரீஷித்துக்கு முக்தி மார்கம் விளக்கும் சந்தர்ப்பத்தில் வைராக்கியத்தை உரைக்கும் ‘’பத்யம்’’ அதன் தமிழ் பொழிப்புரை….

 

’’பச்சைப் புல்பூண்டிருக்க
பஞ்சணை எதற்கு….
பிச்சைக்கை ரெண்டிருக்க
பாத்திரம் எதற்கு….
கச்சுக்கு மரவுரி தர்ப்பை
கச்சிப்பட்டாடை ஏன்….
குச்சுக்கு குகையிருக்க
கூடமாட மாளிகையேன்….
பிக்‌ஷைக்கு புண்யவதி
பானமாய் மகாநதி….
இச்சகத்தில் இவ்வளவு
இருந்தும் ஜீவனமாய்….
எச்சைக்காய் எவன்கீழோ
இருப்பதேன் கோவணமே(தபஸ்வி)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *